பக்கம் எண் :

186யுத்த காண்டம் 

உந்தையை உன்முன் கொன்று - (சிங்கப்பிரான் பிரகலாதனை
நோக்கி) உனது தந்தையான இரணியனை உன்கண் எதிரே கொன்று;
உடலைப் பிளந்து அளைய- அவனுடலை எனது கை நகங்களால்
பிளந்து துழாவவும்; சிந்தை தளராது - சிறிதும்  மனம்  தளராமல்;
அறம் பிழையாச் செய்கையாய் - அற நெறியில்  நின்று தவறாத
செயலை  உடையவனே !;   அந்தமிலா   அன்பு    என்மேல்
வைத்தாய்
-   என்மீது  முடிவில்லாத  பேரன்புடையனாயிருந்தாய்;
அளியத்தாய் - எனது ரட்சகத்துக்கு உரியவனே; எந்தை - என்
அப்பனே; இனி இதற்குக் கைம்மாறுயாது என்றான் - என்பால்
பேரன்பு பூண்ட உனக்கு செய்யக்கூடிய  கைம்மாறு  ஏது?  என்று
கூறியருளினான்.
 

அளைதல் -  துழாவுதல்   (கலக்குதல்)   அறம் பிழையா -
அறத்திலிருந்து     பிசகாத.     அளியத்தாய்    -   கருணை
செய்யத்தக்கவன் (ரட்சிக்கத்தக்கவன்). பகவானுக்குக்  கைம்மாறு
செய்ய  இயலாமை  பக்தர்க்கு   இயல்பு.  இங்கு  நேர்மாறாகப்
பக்தனுக்குக் கைம்மாறு செய்ய  இயலாமை  குறித்துப்  பகவான்
இரங்குகிறான். பாகவத தர்மம் இது.
 

(166)
 

6355.

' "அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட

செயிரின் ஒரு பொழுதில், நுந்தையை யாம் சீறி,

உயிர் நேடுவேம்போல், உடல் அளைய, கண்டும்

செயிர் சேரா உள்ளத்தாய்க்கு, என் இனி யாம்

செய்கேம் ?

 

இமைப்பினை  அயிரா  ஓர்   ஆயிரம்   கூறிட்ட -
கண்ணிமைப் பொழுதை மிக நுண்ணியதாக ஆயிரம் கூறுசெய்த;
செயிரின்  ஒரு பொழுதில்-  சிறிய   பகுதியான  அச்சிறிய
நேரத்துக்குள்; நுந்தையை  யாம் சீறி -  உனது  தந்தையான
இரணியனை நான் சினம் கொண்டு; உயிர்  நேடுவேம் போல்
- கை நகங்களால் உடலைப் பிளந்து  உயிர்  இருக்குமிடத்தைத்
தேடுவது போல; உடல் அளைய- உடல் முழுதும் துழாவுவதை;
கண்டும் செயிர்சேரா- நேரில் பார்த்தும்  என் மீது  சிறிதும்
பகைமை  பாராட்டாத;  உள்ளத்தாய்க்கு-  பேரன்பு  கொண்ட
உள்ளத்தை   உடையவனாயிருந்த    உனக்கு;   என்இனியாம்
செய்கேம்
- நான் என்ன கைம்மாறு செய்வேன்!
 

இமைப்பு -  கண்ணை  மூடித்திறக்கும்  நேரம்.  அயிரா -
நுண்ணிய. செயிர் - குறை. உன் தந்தையின்  உடலைப் பிளந்து,
அளைந்த போதும்