என்னிடம் சிறிதும் பகை உணர்வின்றி, பேரன்பு கொண்டிருந்த மனத்தை  உடையவனான  உனக்கு நான்  என்ன  கைம்மாறு செய்வேன் என்றான்.    | 
(167)    | 
6356.  | ' "கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள் | 
 | எல்லை இலாதன செய்தாரே என்றாலும்; | 
 | நல்லேம், உனக்கு எம்மை; நாணாமல், நாம் செய்வது | 
 | ஒல்லை உளதேல், இயம்புதியால்" என்று உரைத்தான். | 
|   | 
இனி உன் குலத்தோரை - இனி  மேல்  உனது  அசுரர் குலத்தே   பிறந்தவர்களை;  குற்றங்கள்  எல்லை  இலாதன செய்தாரேஎன்றாலும்- அவர்கள் அளவில்லாத குற்றங்களைச் செய்தவர்கள் என்று தெரிந்தாலும்; கொல்லேம் - அவர்களைக் கொல்ல மாட்டேன்; உனக்கு  எம்மை  நல்லேம் -  உனக்கு எந்தப் பிறப்பிலும் நல்லவனாவேன்;  நாம் செய்வது  ஒல்லை உளதேல்-   நான்  உனக்கு   ஏதேனும்   விரைந்து   செய்ய வேண்டியது     இருந்தால்;     நாணாமல்-    நாணப்படாது; இயம்புதியால்என்றுரைத்தான்- கூறுவாயாக  என்று  பரமன் பணித்தான்.    | 
எல்லை இலாதன - அளவற்றவை. எம்மை - எப்பிறப்பிலும்.    | 
(168)    | 
பிரகலாதன் கேட்ட வரமும் சிங்கப் பெருமான் அருளும்    | 
6357.  | ' "முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை; | 
 | பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல், | 
 | என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின் | 
 | அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான். | 
|   | 
முன்பு  பெறப்  பெற்ற -   எம்பெருமானே !   உனக்கு அடியவனாகி யான் முன்பு பெற்றதாகிய; பேறோ முடிவில்லை- பேறுகளுக்கு  எல்லையே  இல்லை; பின்பு  பெறும் பேறும் உண்டோ - இனி மேலும்  நான்  பெற  வேண்டிய  பேறுகள் ஏதேனும் உண்டோ;  பெறுகுவெனேல் -  அப்படி  ஏதேனும் வேண்டிப் பெறுவதென்றால்;  என்பு  பெறாத  இழி  பிறவி எய்தினும் -  எலும்பில்லாத  இழிந்த  புழுவாகப்  பிறந்தேன் என்றாலும்; நின் அன்பு  பெறும் பேறு-  உனது  அன்பைப் பெற்று வாழும் பெரிய   |