என்னிடம் சிறிதும் பகை உணர்வின்றி, பேரன்பு கொண்டிருந்த மனத்தை உடையவனான உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் என்றான். |
(167) |
6356. | ' "கொல்லேம், இனி உன் குலத்தோரை, குற்றங்கள் |
| எல்லை இலாதன செய்தாரே என்றாலும்; |
| நல்லேம், உனக்கு எம்மை; நாணாமல், நாம் செய்வது |
| ஒல்லை உளதேல், இயம்புதியால்" என்று உரைத்தான். |
|
இனி உன் குலத்தோரை - இனி மேல் உனது அசுரர் குலத்தே பிறந்தவர்களை; குற்றங்கள் எல்லை இலாதன செய்தாரேஎன்றாலும்- அவர்கள் அளவில்லாத குற்றங்களைச் செய்தவர்கள் என்று தெரிந்தாலும்; கொல்லேம் - அவர்களைக் கொல்ல மாட்டேன்; உனக்கு எம்மை நல்லேம் - உனக்கு எந்தப் பிறப்பிலும் நல்லவனாவேன்; நாம் செய்வது ஒல்லை உளதேல்- நான் உனக்கு ஏதேனும் விரைந்து செய்ய வேண்டியது இருந்தால்; நாணாமல்- நாணப்படாது; இயம்புதியால்என்றுரைத்தான்- கூறுவாயாக என்று பரமன் பணித்தான். |
எல்லை இலாதன - அளவற்றவை. எம்மை - எப்பிறப்பிலும். |
(168) |
பிரகலாதன் கேட்ட வரமும் சிங்கப் பெருமான் அருளும் |
6357. | ' "முன்பு பெறப்பெற்ற பேறோ முடிவு இல்லை; |
| பின்பு பெறும் பேறும் உண்டோ ? பெறுகுவெனேல், |
| என்பு பெறாத இழி பிறவி எய்தினும், நின் |
| அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள்" என்றான். |
|
முன்பு பெறப் பெற்ற - எம்பெருமானே ! உனக்கு அடியவனாகி யான் முன்பு பெற்றதாகிய; பேறோ முடிவில்லை- பேறுகளுக்கு எல்லையே இல்லை; பின்பு பெறும் பேறும் உண்டோ - இனி மேலும் நான் பெற வேண்டிய பேறுகள் ஏதேனும் உண்டோ; பெறுகுவெனேல் - அப்படி ஏதேனும் வேண்டிப் பெறுவதென்றால்; என்பு பெறாத இழி பிறவி எய்தினும் - எலும்பில்லாத இழிந்த புழுவாகப் பிறந்தேன் என்றாலும்; நின் அன்பு பெறும் பேறு- உனது அன்பைப் பெற்று வாழும் பெரிய |