பக்கம் எண் :

 இரணியன் வதைப் படலம் 189

மின்னைத் தொழு வளைத்ததென்ன - தோன்றி  உடன்
மறையும் மின்னலைத் தொழு  மரத்தில்  பிடித்து  அகப்படுத்தி
வைத்ததைப் போல; மிளிர் ஒளியாய் - ஒளிவிட்டு  விளங்கும்
உடலை உடையவனே; முன்னைத் தொழும்புக்கே- முன்பு நீ
கொண்ட அடித்  தொண்டுக்கே; மூவுலகும் ஆம் அன்றோ
- உனக்கு மூன்று உலகங்களும் உரியதாகும் அல்லவா?; உலகு
எல்லாம்
-   உலகில்  உள்ளவர்கள்  எல்லோரும்; என்னைத்
தொழுது ஏத்தி
- என்னை வணங்கித் துதித்து; எய்தும் பயன்
- அடையும்  எல்லாப்  பயன்களையும்;  உன்னைத் தொழுது
ஏத்தி
- உன்னை வணங்கித் துதித்து;  எய்தி உய்க- அடைந்து
உய்வு பெறுவார்கள் (என்றார்).
 

(171)
 

6360.

' "ஏனவர்க்கு வேண்டின், எளிது ஒன்றோ ?-எற்கு

அன்பர்

ஆன வர்க்கம் எல்லாம் நினக்கு அன்பர் ஆயினார்;

தானவர்க்கு வேந்தன் நீ என்னும் தரத்தாயோ ?

வானவர்க்கும் நீயே இறை-தொல் மறை வல்லோய் !
 

தொல் மறை  வல்லோய்-  பழமையான  வேதங்களை
எல்லாம் ஓதாதுணர்ந்த வித்தகனே;  எற்கு அன்பர்  ஆன
வர்க்கம்
  எல்லாம்-  எனக்கு  அடியவர்களாக  இருக்கும்
அன்பர் கூட்ட மெல்லாம்; நினக்கு  அன்பர்  ஆயினார்-
உன்னிடம் அன்பு கொண்ட உனது  தொண்டர்கள்  ஆவார்;
தானவர்க்கு வேந்தன் நீ- நீ அசுரர் இனத்துக்கு அரசன்;
என்னும் தரத்தாயோ- என்ற தரம் மட்டும் உடையவனோ?;
(அல்ல) வானவர்க்கும் நீயேஇறை- தேவர்களுக்கும் நீயே
தெய்வம்;  ஏனவர்க்கு   வேண்டின் -  உன்னையல்லாது
மற்றெவரும் பெற விரும்பினால்; எளிதுஒன்றோ-நீயடைந்த
பெருவாழ்வை அடைவதென்பது அத்தனை எளியதொன்றோ?
 

வேறு எவரிடமும் கற்காது  இறைவனால்  மயர்வற மதி
நலம்  அருளப்   பெற்றவன்  பிரகலாதன்.  வர்க்கம்.  குழு
(கூட்டம்). தரம் - தகுதி.
 

(172)
 

6361.

' "நல் அறமும் மெய்ம்மையும், நான்மறையும், நல்

அருளும்,

எல்லை இலா ஞானமும், ஈறு இலா எப் பொருளும்,