பக்கம் எண் :

190யுத்த காண்டம் 

தொல்லை சால் எண் குணனும், நின் சொல்

தொழில் செய்ய,

மல்லல் உரு ஒளியாய் ! நாளும் வளர்க, நீ !"
 

மல்லல் உரு ஒளியாய்- வளம் மிக்க அழகிய ஒளிபடைத்த
மேனியை உடையவனே; நல்அறமும் மெய்ம்மையும்-  என்றும்
நன்மை   தரும்   அறமும்     வாய்மையும்;    நான்மறையும்,
நல்அருளும்
- நான்கு வேதங்களும், நலம் பயக்கும் திருவருளும்;
எல்லைஇலாஞானமும்- அளவில்லாத மெய்யுணர்வாகிய நல்ல
ஞானமும்;   ஈறு   இலா   எப்பொருளும்-   அழிவில்லாத
எவ்விதமான பொருள்களும்; தொல்லைசால் எண்  குணனும்-
பழமை வாய்ந்த எட்டுக்  குணங்களும்;  நின்சொல்  தொழில்
செய்ய
-  (ஆகிய  இவையெல்லாம்)   உனது  சொல்கேட்டுத்
தொழில் செய்ய;  நாளும்  வளர்க  நீ -  நாளும் நாளும்  நீ
வளர்ந்து விளங்குவாயாக.
 

"வளர்க நீ" என்பது அடுத்த  பாட்டில் வரும் "என்று வரம்
அருளி" என்பதனோடு இயைந்து  பொருள்படும்.  மெய்ம்மை -
வாய்மை  மெய்யுணர்வாகிய  ஞானம்  வரம்பற்றது  என்பதால்
'எல்லை   இலா   ஞானம்'   என்றார்.    எண்   குணங்கள்;
தன்வயத்தனாதல்,    தூய     உடம்பினனாதல்,     இயற்கை
உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின்
நீங்குதல், பேரருள் உடைமை,  முடிவுஇல்  ஆற்றல்  உடைமை,
வரம்பு இல் இன்பம் உடைமை என்பனவாம்.
 

(173)
 

பிரகலாதனுக்கு முடிசூட்ட ஆவன புரியுமாறு தேவர்களைப் பணித்தல்
 

6362.

'என்று வரம் அருளி, "எவ் உலகும் கைகூப்ப,

முன்றில் முரசம் முழங்க, முடி சூட்ட,

நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து, இவனுக்கு

ஒன்று பெருமை உரிமை புரிக !" என்றான்.
 

என்றுவரம்  அருளி-  என்று கூறி பிரகலாதனுக்கு  வரம்
தந்தருளி; எவ்வுலகும்  கை  கூப்ப-  எல்லா  உலகத்தவரும்
இவனைக் கை கூப்பி வணங்குமாறு;முன்றில் முரசம் முழங்க-
இந்த  பிரகலாதனுடைய  அரண்மனை  முற்றத்திலே  பலவகை
மங்கல   முரசுகள்   முழங்க;    முடிசூட்ட-   மூவுலகுக்கும்
முதல்வனாகப்   பொன்    முடிசூட்ட;    நின்ற    அமரர்
அனைவீரும்
-   இங்கு    நிற்கும்   தேவர்களாகிய   நீங்கள்
எல்லோரும்; நேர்ந்து- மனம்  இசைந்து;  இவனுக்கு  ஒன்று
பெருமை
உரிமை புரிக - இப்பிரகலாதனுக்கு