பக்கம் எண் :

196யுத்த காண்டம் 

6370.

'நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;

எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு

உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;

திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ ?

 

நண்ணின மனிதர் பால் - (இங்கு போரிடப்படை யெடுத்து
வந்து)  அடைந்த   மானிடர்களிடம்;   நண்பு   பூண்டனை -
நட்புடையவனாய் இருக்கிறாய்; செய்வினை  எண்ணினை - (நீ
செய்ய வேண்டிய செயல்களை) எண்ணி முடிவு செய்து விட்டாய்;
என்னை வெல்லுமாறு உன்னினை- என்னைப் போரில் வெற்றி
கொள்ள நினைத்தாய்; அரசின்  மேல்  ஆசை  ஊன்றினை-
இலங்கை ஆட்சியின் மேல் ஆசையில்  ஊன்றி  உள்ளாய்; உன்
செயல் திண்ணிது
- உனது செயல்கள்  வன்மை  மிக்கது; பிறர்
செறுநர்  வேண்டுமோ
-    வேறான    பிற    பகைவர்களும்
வேண்டுமோ ?
 

ஊன்றுதல் - நிலைத்திருத்தல்.  செறுநர் - பகைவர்.  'நீயே
போதுமே வேறு பிற பகையும் வேண்டுமோ' என்பது கருத்து.
 

(6)
 

6371.

'அஞ்சினை ஆதலின், அமர்க்கும் ஆள்அலை;

தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை;

வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாறினை;

நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ ?

 

அஞ்சினை   ஆதலின்-   அந்த   மானிடருக்கு    நீ
பயந்துவிட்டாய்  ஆதலால்; அமர்க்கும்   ஆன்   அலை-
அவருடன்  போரிடுவதற்கும்  ஏற்ற  ஆளல்ல; தஞ்சு  என-
அடைக்கலம் என்று;  மனிதர்  பால்  வைத்த  சார்பினை -
மனிதர்களிடம்   கொண்ட   பற்று   உடையவனாய்  விட்டாய்;
வஞ்சனை   மனத்தினை-     வஞ்சகமுடைய     மனத்தை
உடையவனாயுள்ளாய்; பிறப்பு  மாற்றினை-  நமது  அரக்கப்
பிறப்புக் குரிய பண்பிலிருந்து மாறிவிட்டாய்; நஞ்சினை உடன்
கொடு
-  கொடியவிடத்தை   உடன்   வைத்துக்   கொண்டு;
வாழ்தல் நன்மையோ- வாழ்வதால் நன்மை உண்டாகுமோ?
 

பகைவரைப்    பற்றி    அஞ்சாதவர்களே     அமருக்கு
உரியவர்கள்  என்பதால்  'அஞ்சினை   ஆதலின்  அமர்க்கும்
ஆள் அல்லை" என்றான்.  தஞ்சு - புகலிடம்.  அரக்கர்க்குரிய
இயல்புகள் எதுவும் இல்லாத நீ  உனது  பிறப்பையே  மாற்றிக்
கொண்டாய் என்பான் "பிறப்பு மாற்றினை"  என்றான். "நீதியால்
வந்த தொரு நெடுந்தரும நெறியல்லால் சாதியால்