எழுந்து நின்ற பிறகும்; நீதி சான்றன - நீதியுடன் அமைந்த உறுதியுரைகள்; ஒன்றல பலப்பல - ஒன்றல்லாதனவான பலவற்றை; உறுதி ஓதினான் - இராவணனுக்கு உறுதி பயப்பனவாகக் கூறினான். |
துணைவர் - அமைச்சர் நால்வர். |
(9) |
6374. | 'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக |
| ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய், |
| கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ? |
| வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? |
|
வாழியாய் கேட்டியால் - அண்ணலே வாழி ! யான் கூறுவதைக் கேட்பாயாக; வாழ்வு கைம் மிக- உனது வாழ்க்கை நாளுக்கு நாள் மேம்பட; ஊழி காண்குறும்- ஊழிக் காலத்தின் எல்லையைக் காணஉள்ள; நினது உயிரை ஓர்கிலாய்- உனது உயிரின் சீர்மையை எண்ணாதிருக்கிறாய்; கீழ்மையோர் சொற்கொடு - கீழ்மக்களின் சொல்லைக் கேட்டு; கெடுதல் நேர்தியோ - கேட்டை அடைய முற்படுகிறாயா?; அறம் பிழைத்தவர்க்கு- அறநெறிகளைவிட்டு தவறி நடந்தவர்க்கு; வாழ்மைதான் வாய்க்குமோ- நல்ல வாழ்க்கை அமையுமோ? |
கைம்மிக - மேம்பட ஓர்தல் - ஆய்ந்தறிதல். வரத்தால் பெற்ற வாழ்வை நினைத்துப் பார்க்க வேண்டாமா? என்பான்" ஓர்கிலாய்" என்றான். வாழ்மை - வாழ்க்கை. "அறநெறி பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" என்ற சிலப்பதிகாரம் சிந்திக்கத்தக்கது. |
(10) |
6375. | 'புத்திரர், குருக்கள், நின் பொரு இல் கேண்மையர் |
| மித்திரர், அடைந்துளோர், மெலியர், வன்மையோர், |
| இத்தனை பேரையும், இராமன் வெஞ் சரம் |
| சித்திரவதை செயக் கண்டு, தீர்தியோ ? |
|
புத்திரர் குருக்கள்- உன் புத்திரர்கள், குருமார்களாகிய மேலோர்கள்; பொருஇல் கேண்மையர்- ஒப்பற்ற உறவினர்கள்; மித்திரர்- உனக்குரிய நண்பர்கள்; அடைந்துளோர்- உன்னை அடைந்து உன் ஆதரவில் வாழும் மக்கள்; மெலியர் வன்மை யோர்- வாழ்க்கையில் மெலிந்தவர்கள், வலிமை மிக்க வீரர்கள்; இத்தனை பேரையும்- இத்தனை பேரையும்; இராமன் வெஞ்சரம்- இராமபிரானுடைய கொடிய அம்புகள்; சித்திரவதை செய- |