சித்திரவதை செய்வதை; கண்டு தீர்தியோ - பார்த்துவிட்டு நீயும் அழியப் போகிறாயோ. |
குருக்கள் - புரோகிதர் (குருமார்கள்) மித்திரர் - நண்பர்கள்'. தீர்தல் - அழிதல். |
(11) |
வீடணன் இலங்கையை விட்டுப் போதல் |
6376. | 'எத்துணை வகையினும் உறுதி எய்தின, |
| ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை; |
| அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என, |
| உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான். |
|
எத்துணை வகையினும் - எத்தனை எத்தனை வகையுண்டோ அத்தனை வகையிலும்; உறுதி எய்தின ஒத்தன- உனக்கு உறுதி பயப்பதற்கொத்த நீதிகளை; உணர்த்தினேன்; உணர கிற்றிலை - எடுத்துக்கூறி உணர்த்தினேன்; நீ உணர்ந்தாயல்லை; அத்த ! என் பிழை பொறுத்து அருளுவாய் என் - எனது தந்தை போன்றவனே ! இதுவரை நான் ஏதேனும் பிழை செய்திருந்தால் அவைகளை எல்லாம் பொறுத்து அருள் வாயாக (என்று கூறிவிட்டு); உத்தமன் அந்நகர் ஒழியப் போயினான்- நல்ல குணங்களை உடைய உத்தமனாகிய வீடணன் அந்த இலங்கை நகரத்தை விட்டு நீங்கிச் சென்றான். |
அத்தன் - தந்தை (இங்கு இராவணனைத் தந்தை போலவே வீடணன் கருதியவன் என்பது புலப்படுகிறது). ஒத்தன - அறத்துக்குப் பொருந்துவனவான நீதிகள். |
வீடணன் இராவணனுக்குக் கூறிய நீதிகள் யாவும் இராவணனுக்கு நன்மை பயப்பன. 'சில புகலுதல் ஒழி' என்று வெறுத்துரைத்த இராவணனுக்கு மேலும் உறுதி உரைத்தமையால் 'பிழை பொறுத்தருள்வாய்' என்றான். |
(12) |
6377. | அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும் |
| வினையவர் நால்வரும், விரைவின் வந்தனர்:- |
| கனை கழல் காலினர், கருமச் சூழ்ச்சியர், - |
| இனைவரும் வீடணனோடும் ஏயினார். |
|
அனலனும், அனிலனும், அரன், சம்பாதியும்- அனலன், அனிலன், அரன், சம்பாதி என்ற; வினையவர் நால்வரும் - |