மிடத்தடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே" என்பது நாச்சியார் திருமொழி 4-1) தரையில் சுழி எழுதும் போது இரு கோடுகளும் சேர்ந்து கூடினால் தலைவன் வருவான் என்பது மகளிர் நம்பிக்கை என இலக்கிய மரபு பேசும். கூடலிழைத்தல் எனப் பெறும். |
(27) |
இயற்கைக் காட்சிகளால் இராமன் கவலை கொள்ளல் |
| 6392. | கூதிர் நுண் குறும் பனித் திவலைக் கோவை கால், |
| மோதி வெண் திரை வர, முட வெண் தாழைமேல், |
| பாதி அம் சிறையிடைப் பெடையைப் பாடு அணைத்து |
| ஓதிமம் துயில்வ கண்டு, உயிர்ப்பு வீங்கினான். |
| |
கூதிர் நுண் குறும் பனித்திவலைக் கோவை, கால் மோதி வெண்திரை வர- குளிர்ந்த மிகச் சிறிய பனித் துளிகளின் தொகுதியுடன், காற்று வீசுவதால் வெண்மைநிற அலைஎழுவதால்; முடவெண் தாழை மேல் - வளைந்த வெண்மை நிறமான தாழை மரத்தின் மீது; பாதிஅம் சிறையிடை - தனது ஒரு பாதி இறகின்இடையே; பெடையைப் பாடு அணைத்து- பெண் அன்னத்தைப் பக்கத்திலே அணைத்துக் கொண்டு; ஓதிமம் துயில்வகண்டு- ஆண் அன்னங்கள் உறங்குவதைக் கண்டு; உயிர்ப்பு வீங்கினான் - இராமபிரான் பெருமூச் செறிந்தான். |
பாடு - பக்கம். உயிர்ப்பு - பெரு மூச்சு. இணைபிரியாத அன்னங்களைக் கண்டு, பிரிவுத்துயரால் இராமபிரான் பெருமூச்செறிந்தான் என்க. |
(28) |
| 6393. | அருந்துதற்கு இனிய மீன் கொணர, அன்பினால் |
| பெருந் தடங் கொம்பிடைப் பிரிந்த சேவலை, |
| வருந் திசை நோக்கி, ஓர் மழலை வெண் குருகு, |
| இருந்தது கண்டு நின்று, இரக்கம் எய்தினான். |
| |
அருந்துதற்கு இனிய மீன் கொணர- உண்பதற்குச் சுவையான மீனைக் கொண்டு வர; அன்பினால் - பெண் குருகினிடம் கொண்ட பேரன்பால்; பெருந்தடங் கொம்பிடை- தான் வசிக்கும் பெரிய மரக்கிளையில் இருந்து; பிரிந்த சேவலை- பிரிந்து சென்ற ஆண் நாரையை; வரும் திசை நோக்கி - அது வருகின்ற திசையைப் பார்த்து; ஓர் மழலை வெண் குருகு- ஒரு இளமையான வெண்மை நிறம் கொண்ட பெண் நாரை; இருந்தது |