கண்டு நின்று - காத்திருந்ததைப் பார்த்து அங்குநின்று; இரக்கம்எய்தினான்- இராமபிரான் இரக்கம் கொண்டான். |
(29) |
| 6394. | ஒரு தனிப் பேடைமேல் உள்ளம் ஓடலால், |
| பெரு வலி வயக் குருகு இரண்டும் பேர்கில, |
| திருகு வெஞ் சினத்தன, தெறு கண் தீ உகப் |
| பொருவன கண்டு, தன் புருவம் கோட்டினான். |
| |
ஒருதனிப் பேடை மேல் - தனியாக நின்ற ஒருபெண் நாரையிடம்; உள்ளம் ஓடலால்- மனம் செல்லுதலால்; பெருவலிவயக்குருகு இரண்டும் - பெரிய வலிமை மிக்க இரண்டு ஆண் நாரைகள்; பேர்கில திருகு வெஞ்சினத்தன- அந்த இடத்தை விட்டுப்பெயராதனவாய், மிகுந்த சினத்துடன்; தெறுகண் தீஉக- கண்கள் நெருப்புப் பொறிசிந்த; பொருவனகண்டு - அந்த ஆண் நாரைகள் தமக்குள் போரிடுவதைக் கண்டு; தன் புருவம் கோட்டினான்- இராமபிரான் கோபத்தால் தனது புருவத்தை வளைத்துப் பார்த்தான். |
ஒரு பெண் நாரையை அனுபவிப்பது யார் என்ற போட்டியில் ஆண் நாரைகள் போரிடுதல் அறமன்று என்பதால், சீதையைக் கவர்ந்து சென்று சிறை வைத்திருந்த இராவணனது கொடுஞ்செயல் நினைவுக்கு வர, இராமன் கோபம் கொண்டு புருவத்தை வளைத்தான் என்க. |
(30) |
| 6395. | உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம் |
| கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன், |
| தண் நிறப் பவள வாய் இதழை, தற் பொதி |
| வெண் நிற முத்தினால், அதுக்கி, விம்மினான். |
| |
உள் நிறை ஊடலில் - பெண் அன்னத்தின் உள்ளத்தில் நிறைந்த ஊடலில்; தோற்ற ஓதிமம்- தோற்று, பணிந்த ஆண் அன்னம்; கண்ணுறு கலவியில்- இரண்டு உடம்பும் ஒன்று பட்டு மகிழ்ந்த கலவி இன்பத்திலே;வெல்லக் கண்டவன்- ஆணன்னம் வெற்றி கொண்டதைக் கண்ட ராமபிரான்; தண் நிறப்பவளவாய் இதழை- குளிர்ந்த பவளம் போன்ற தனது வாயின் உதடுகளை; தற் பொதி வெண் நிறமுத்தினால்- அந்த இதழ்களால் மறைக்கப் பட்டுள்ள வெண்மையான முத்துப் போன்ற பற்களால்; அதுக்கி விம்மினான் - மெல்ல அழுத்தி விம்மினான். |