பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 211

கேள்வியின்  துறை  -   நூற்கேள்வியின்   துறை.   அரக்க
இனத்தினனான வீடணன், வானர சேனைக்குப் பக்கம் செல்வதால்
ஏதேனும் தவறுண்டாகுமோ என்ற ஐயம் எதுவுமின்றிச் சென்றான்
என்பதை 'அயிர்ப்பில் சிந்தையான்' என்றது காட்டும்.
 

(33)
 

6398.

முற்றிய குரிசிலை, 'முழங்கு தானையின்

உற்றனர், நிருதர் வந்து' என்ன ஒன்றினார்,

'எற்றுதிர்; பற்றுதிர்; எறிதிர்' என்று, இடை

சுற்றினர்-உரும் எனத் தெழிக்கும் சொல்லினார்.

 

முற்றிய  குரிசிலை-   அங்கு   வந்தடைந்த  வீடணனை
(பார்த்தவானர  வீரர்கள்) முழங்கு  தானையின்   உற்றனர்
நிருதர் வந்து என்ன
- ஆரவாரம்  மிக்க வானரப்  படையில்
அரக்கர்  வந்து  புகுந்தனர்  என்று;   ஒன்றினார்-   வீரர்கள்
எல்லாம்   ஒன்றாகத்   திரண்டனர்;    எற்றுதிர்   பற்றுதிர்,
எறிதிர்  என்று-   அடியுங்கள்   பிடியுங்கள்   ஆயுதங்களால்
எறியுங்கள் என்று கூறி; உரும் எனத் தெழிக்கும் சொல்லினர்
- இடியென  அதட்டும்   சொல்லினராகி;  இடை  சுற்றினர்-
வீடணன் முதலியோரைச் சூழ்ந்து கொண்டனர்.
 

(34)
 

6399.

'தந்தது தருமமே கொணர்ந்துதான்; இவன்

வெந் தொழில் தீவினை பயந்த மேன்மையான்,

வந்தனன் இலங்கையர் மன்னன் ஆகும்; நம்

சிந்தனை முடிந்தன' என்னும் சிந்தையார்.

 

தருமமே கொணர்ந்துதான் தந்தது- இந்த அரக்கர்களைத்
தரும தேவதை தானே நம்மிடம் கொண்டு வந்து தந்தது; இவன்
வெந்தொழில் தீவினை  பயந்த  மேன்மையான்
-  இவன்,
கொடுந்தொழில் செய்யவந்த தீயவினை பயந்த  மேன்மையோன்
ஆவான்;  வந்தனன்   இலங்கையர்   மன்னன்   ஆகும்-
வந்தவனாகிய   இவன்  இலங்கை  வேந்தனான  இராவணனே
ஆகும்.  நம்  சிந்தனை  முடிந்தன-  இலங்கை  வேந்தனை
வெல்ல வேண்டும் என்ற நமது  எண்ணம்  நிறைவேறிவிட்டது;
என்னும்  சிந்தையார்
-  என்ற  எண்ணம் கொண்டவர்களாக
அந்த வானர வீரர் இருந்தனர்.
 

இவன்  கொடுந்   தொழிலன்    தீவினை   பயனளிக்கப்
பெற்றமையால்  கொடுஞ்  செயல்  புரிவதில்  மிக்கவனாவான்
என்பதை   'வெந்தொழில்    தீவினை   பயந்தமேன்மையான்'
என்றார். வந்த இவன் இலங்கை வேந்தன்