இராவணனே; இராவணனை வெல்லுவது என்ற நம் விருப்பம் நிறைவேறியது என்பார்' நம் சிந்தனை முடிந்தன' என்றார். நமக்குச் சிரமமின்றி தரும தேவதையே நமக்கு இவனைத் தந்தது என்பார்' தருமமே கொணர்ந்து தந்தது' என்றார். |
(35) |
| 6400. | "இருபது கரம்; தலை ஈர்-ஐந்து" என்னும் அத் |
| திருவிலிக்கு அன்னவை சிதைந்தவோ?' என்பார், |
| 'பொரு தொழில் எம்மொடும் பொருதி, போர்' என்பார், |
| ஒருவரின் ஒருவர் சென்று, உறுக்கி ஊன்றுவார். |
| |
அத்திருவிலிக்கு- அந்த நற்பேறில்லாத தீவினையாளனுக்கு; இருபதுகரம் தலை ஈர் ஐந்து என்னும் - இருபது கைகளும், பத்துத் தலைகளும் உண்டு என்பார்களே; அன்னவை சிதைந்தவோ என்பார்- அவை எல்லாம் சிதைந்து அழிந்தனவோ என்பார்கள்; பொரு தொழில் எம்மொடு பொருதிபோர் என்பார் - போர்த் தொழில் வல்லவன் என்றால் எங்களோடு; போரிடவருகஎன்பார்கள் ஒருவரின் ஒருவர் சென்று - வானர வீரர்களில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு சென்று; உறுக்கி ஊன்றுவார் - சினந்து எதிர்க்கலாயினர். |
திருவிலி - நல்வினைப் பயன் இல்லாதவன். உறுக்கி - வெகுண்டு. |
(36) |
| 6401. | 'பற்றினம் சிறையிடை வைத்து, பாருடைக் |
| கொற்றவர்க்கு உணர்த்துதும்' என்று கூறுவார்; |
| 'எற்றுவது அன்றியே, இவனைக் கண்டு, இறை |
| நிற்றல் என், பிறிது?' என நெருக்கி நேர்குவார். |
| |
பற்றினம் சிறையிடை வைத்து- இவர்களைப் பிடித்துச் சிறையிலே அடைத்து வைத்து விட்டு; பாருடைக் கொற்றவர்க்கு உணர்த்துதும்- இவ்வுலகுக்கெல்லாம் அரசனான இராமபிரானுக்கு உணர்த்துவோம்; என்று கூறுவார்-; எற்றுவது அன்றியே- உடனே அடித்துக் கொல்லுவதல்லாமல்; இவனைக் கண்டு இறை நிற்றல் பிறிது என்- இவனைப் பார்த்து, சிறிது நேரம் நிற்பது ஏன் என்று; நெருக்கி நேர்குவார் - நெருக்கி எதிர்ப்பாராயினர். |
பற்றினம் - பிடித்தவர்களாக பாருடைக் கொற்றவன் - உலகுக் கெல்லாம் நாயகனான இராமபிரான். |
(37) |