| 6402. | 'இமைப்பதன்முன் விசும்பு எழுந்து போய பின், |
| அமைப்பது என், பிறிது? இவர் அரக்கர் அல்லரோ? |
| சமைப்பது கொலை அலால், தக்கது யாவதோ? |
| குமைப்பது நலன்' என முடுகிக் கூறுவார். |
| |
இமைப்பதன் முன்- கண்ணை இமைப்பதற்குள்; விசும்பு எழுந்துபோய பின்- இவர் ஆகாயத்திலே எழுந்து சென்ற பின்பு; அமைப்பது என் பிறிது- நாம் வேறு என்ன செய்ய முடியும்; இவர் அரக்கர் அல்லரோ- இவர்கள் அரக்கர்கள் அல்லவா?; சமைப்பது கொலை அலால் - நாம் செய்யத்தக்கது இவர்களைக் கொலை செய்வதே அல்லாமல்; தக்கது யாவதோ - தகுந்த செயல் வேறு யாதுள்ளது?; குமைப்பது நலன்என - உருத்தெரியாமல் இவர்களை அழிப்பதே நல்லதாகும் என்று; முடுகிக் கூறுவார்- விரைவாகக் கூறுவாராயினர். |
சமைத்தல் - செய்தல். குமைப்பது - அழிப்பது. |
(38) |
அனுமன் ஏவலால் மயிந்தனும் துமிந்தனும் வருதல் |
| 6403. | இயைந்தன இயைந்தன இனைய கூறலும், |
| மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார், |
| அயிந்திரம் நிறைந்தவன் ஆணை ஏவலால், |
| நயம் தெரி காவலர் இருவர், நண்ணினார். |
| |
இயைந்தன இயைந்தன - வானர வீரர் தமக்குத் தோன்றியவைகளை எல்லாம்; இனைய கூறலும்- இவ்வாறு கூறியபோது; மயிந்தனும் துமிந்தனும் என்னும் மாண்பினார்- மயிந்தன், துமிந்தன் என்ற பெயர்களை உடைய மாண்புடையவர்கள்; அயிந்திரம் நிறைந்தவன்- அயிந்திரம் என்னும் இலக்கணத்தைக் கற்று நிரம்பியவனான அனுமானது; ஆணைஏவலால்- உத்திரவுப்படி ஏவியதால்; நயம் தெரி காவலர்- நீதியைத் தெரிந்த காவலர்கள்;இருவர் நண்ணினார்- இரண்டு பேர் அங்கு வந்தடைந்தனர். |
அயிந்திரம் நிறைந்தவன் அனுமன். அயிந்திரம் இந்திரனால் செய்யப்பெற்ற வடமொழி இலக்கண நூல் என்பர். |
(39) |
| 6404. | விலக்கினர் படைஞரை; வேதம், நீதி நூல், |
| இலக்கணம், நோக்கிய இயல்பர் எய்தினார்,- |