பக்கம் எண் :

214யுத்த காண்டம் 

'சலக் குறி இலர்' என, அருகு சார்ந்தனர்-

புலக் குறி அற நெறி பொருந்த நோக்கினார்.

 

படைஞரை   விலக்கினர்   -   (வந்த   காவலர்களான
மயிந்தனும், துமிந்தனும்)  வானரப்  படைவீரர்களை  விலகும்படி
செய்தார்கள்; வேதம் நீதி நூல்- வேதத்திலும், நீதி நூல்களிலும்
கூறப்பட்ட; இலக்கணம்  நோக்கிய-  மனித  இலக்கணங்களை
நன்கறிந்த; இயல்பர் எய்தினார்- இயல்புடைய  அக்காவலர்கள்
விபீடணன் முதலியோரை நெருங்கினர்; 'சலக்குறி இலர்'  என-
இவர்களிடம் வஞ்சகச் செய்கை எதுவும் இல்லை என்று; அருகு
சார்ந்தனர்
- அவர்களுக்குமிக அருகில் சென்றனர்; புலக்குறி
அற நெறி
- சிறந்த  ஞானமுள்ளமைக்குரிய  அடையாளத்தையும்,
அறநெறி   நின்றவர்   என்பதையும்; பொருந்த  நோக்கினர்-
பொருந்தியிருப்பதைப் பார்த்தனர்.
 

படைஞர் -  (வானரப்)    படைவீரர்கள்.   காவலர்களான
மயிந்தனும்  துமிந்தனும்  வேதங்களிலும்,   நீதி   நூல்களிலும்
கூறப்பட்ட  மனித   இயல்புகளையும்,   நல்லார்,   பொல்லார்
இலக்கணங்களையும்   நன்றாகக்  கற்றறிந்தவர்கள்   என்பதை
'வேதம் நீதி நூல்  இலக்கணம்  நோக்கிய  இயல்பர்" என்றார்.
சலக்குறி -  வஞ்சகர்  என்பதற்கான  அடையாளம்  புலக்குறி-
ஞானம் உள்ளவர்கள் என்பதற்கான அடையாளம்.
 

(40)
 

மயிந்தன் வினாவும் அனலன் விடையும்
 

6405.

'யார்? இவண் எய்திய கருமம் யாவது?

போர்அது புரிதிரோ? புறத்து ஓர் எண்ணமோ?

சார்வு உற நின்ற நீர் சமைந்தவாறு எலாம்,

சோர்விலீர், மெய்ம் முறை, சொல்லுவீர்' என்றான்.

 

யார்? இவண்  எய்திய கருமம்  யாவது?-  (அனுமன்
ஆணைப்படி வந்த காவலரில் மூத்தவனான மயிந்தன் வீடணன்
முதலியோரை நோக்கி)  நீங்கள் யார்?  இங்கு  வந்த  காரியம்
யாது? போரது புரிதிரோ- போர் செய்ய வந்தீர்களா?; புறத்து
ஓர் எண்ணமோ? 
-  அல்லது,  அதுவல்லாத  வேறு  ஒரு
எண்ணத்துடன் வந்தீர்களா?; சார்வு உற நின்ற நீர் -  இந்த
வானரப்    படையைச்   சார்ந்து    நின்றிருக்கும்    நீங்கள்;
சமைந்தவாறுஎலாம் - உங்கள் மனத்தில் நினைத்து வந்ததை
எல்லாம்; சோர்விலீர்