பக்கம் எண் :

256யுத்த காண்டம் 

கொடுத்த பைம்புள் - அந்தத்தீயில் வீழ்ந்து தனது  உடலையே
அவனுக்கு  உணவாகக்   கொடுத்த   ஒரு   ஆண்புறா;   வீடு
பெற்றுயர்ந்த  வார்த்தை
- பரமபதம் பெற்று உயர்ந்தது என்ற
வார்த்தை;   வேதத்தின்  விழுமிது அன்றோ- வேதத்தைவிட
மேலான தொன்றல்லவா? 
 

(109)
 

6474.

'போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத

போரின்,

"ஆதிஅம் பரமே! யான் உன் அபயம்!" என்று 

அழைத்த அந் நாள்,

வேதமும் முடிவு காணா மெய்ப்பொருள் வெளி  

வந்து எய்தி,

மா துயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, 

மறப்பிலாதார்?

 

போதகம்  ஒன்று  - (கஜேந்திரன் என்ற பெயர் கொண்ட)
யானை  ஒன்று;   கன்றி   இடங்கர்மாப் பொருத போரின்-
தாமரைப்பொய்கையில்   சினம்  கொண்ட முதலை ஒன்று தனது
காலைப்  பற்றி   இழுத்துச்செய்த   போரிலே   தளர்ந்துபோய்;
ஆதியம்   பரமே  யான் உன் அபயம் - ஆதிமூலமாயுள்ள
பரம்பொருளே நான்   உனது அடைக்கலம்;  என்று அழைத்த
அந்நாள்
- என்று அழைத்த அந்த நாளிலே; வேதமும் முடிவு
காணா   மெய்ப்பொருள்
-  வேதங்களும்  தேடி முடிவுகாண
முடியாத   மெய்ப்பொருளாகிய   பரமன்; வெளிவந்தெய்தி -
அந்த யானைக்காக வடிவெடுத்து வெளிப்பட்டு அந்த யானையை
அடைந்து;   மாதுயர்   துடைத்த வார்த்தை - முதலையைக்
கொன்று   யானைக்குற்ற   துன்பத்தை  மாற்றியருளினார் என்ற
வார்த்தையை;   மறப்பிலாதார்   மறப்பரோ - மறதியில்லாத
அடியார்கள்   என்றும்    மறப்பார்களோ? (மறக்கமாட்டார்கள்)
 

போதகம் - யானை.   இடங்கர்மா-முதலை. மெய்ப்பொருளே
யானைக்கு அடைக்கலம் தந்து காத்தார் என்னும்  போது நம்மை
அடைந்த வீடணனை ஏற்றுக்கொள்ளுதல் நமது கடமை அல்லவா
என்பது கருத்து. 
 

(110)
 

6475.

'மன்னுயிர் எல்லாம் தானே வருவித்து வளர்க்கும்

மாயன்,

தன் அன உலகம் எல்லாம் தருமமும் எவையும் 

தானே