பக்கம் எண் :

258யுத்த காண்டம் 

உண்டு   கண்டத்திலே   நிறுத்தி வைத்த; நகை மழுவாளன் -
ஒளியுடைய   மழுவை   ஆயுதமாகக்   கொண்ட   சிவபிரான்;
நாளும்தஞ்சு என
- வாழ்நாள் குறைவாக (மார்க்கண்டனுக்கு);
தாதைபால்  கொடுத்து - தந்தையான மிருகண்டு முனிவருக்கு
வரம்தந்தும்; சாதல்  அஞ்சி   அபயம்   என்ற - சாவுக்கு
அஞ்சினேன் நான்  உனக்கு அடைக்கலம் என்று சரணடைந்த;
அந்தணர்க்கு  ஆகி
-   மறையவனான   மார்க்கண்டனுக்கு
அருள்புரிய; அந்நாள் வெஞ்சினக் கூற்றை - அந்த நாளிலே
மார்க்கண்டனது உயிரைக் கவரவந்த கொடிய சினத்தை உடைய
எமனை; மாற்றும் மேன்மையின்- குறைத்துத் தந்த வாழ்நாளை
என்றும்   பதினாறாக   மாற்றிய   சிவபெருமானுடைய மேலான
பண்பைவிட;   மேன்மை  உண்டோ - மேலானது வேறேதும்
உண்டோ?
 

மிடறு-கழுத்து. நகை-ஒளி. 
 

(112)
 

6477.

' "சரண் எனக்கு யார்கொல்? என்று சானகி 

அழுது சாம்ப,

"அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!" என்று 

அருளின் எய்தி,

முரணுடைக் கொடியோன் கொல்ல,மொய்அமர் 

முடித்து, தெய்வ

மரணம் என் தாதை பெற்றது என்வயின் வழக்கு 

அன்று ஆமோ?

 

சரண்   எனக்கு   யார் கொல் என்று - (இராவணனால்
கவர்ந்து   செல்லப்பட்டபோது)   எனக்கு  அடைக்கலமளித்துக்
காப்பவர்   யார் என்று   கூறி;   சானகி அழுது சாம்ப - சீதா
பிராட்டி அழுது   சோர்ந்திருக்க;  அரண் உனக்கு ஆவேன் -
நான்   உனக்கு  அரணாக   நின்று காப்பேன்; வஞ்சி அஞ்சல்
என்று   அருளின்  எய்தி
-   வஞ்சிக்   கொடி போல்பவளே
அஞ்சாதே   என்று   கருணை  கொண்டு   வந்து;  முரணுடைக்
கொடியோன்   கொல்ல 
-     முரண்பட்ட   மனம் கொண்ட
கொடியவனான இராவணன் வாளால்   வெட்டிக்கொல்ல;   மொய்
அமர்   முடித்து 
-  இராவணனுடன்  நெருங்கிய போர் செய்து
முடித்து;தெய்வ மரணம் என் தாதை   பெற்றது   -  தெய்வீக
மரணத்தை எனக்குத் தந்தையான சடாயு   பெற்றது;  என் வயின்
வழக்கன்றாமோ
- எனக்கு மட்டும் முறையற்றதாகுமோ? ஆகாது.
 

சரண்-அடைக்கலம் (புகலிடம்).   சாம்ப-சோர்வுற,   அரண்-
பாதுகாப்பு அஞ்சல்-அஞ்சாதே. மொய் அமர்-நெருங்கிய போர்.