சடாயுவைப் பெரிய உடையார் என வைணவ உலகம் போற்றும். அந்தச் சடாயு பெற்ற தெய்வமரணம் நான் பெறுவது முறையாகுவதே என்றான் ராமபிரான். மானமே நேரிலும் சரணடைந்தோரைக் காப்பதே பேரறம் என்பது இராமன் கருத்தாதல் காண்கிறோம். |
(113) |
6478. | 'உய்ய, 'நிற்கு அபயம்!" என்றான் உயிரைத் தன் |
| உயிரின் ஓம்பாக் |
| கய்யனும், ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும், |
| மய் அற, நெறியின் நோக்கி, மா மறை நெறியில் |
| நின்ற |
| மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகில் |
| வீழ்வார். |
| |
உய்யநிற்கு அபயம் என்றான்- நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய; உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்கய்யனும்- உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக்காப்பாற்றாத கீழ்மகனும்; ஒருவன் செய்த உதவியில் கருத்திலானும் - ஒருவன் செய்த உதவியில் கருத்தில்லாது மறந்தவனும்; மய்அற நெறியின் நோக்கி - குற்றம் நீங்க, அறநெறியை அறிந்து; மாமறை நெறியில் நின்ற - சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்; மெய்யினைப் பொய் என்பானும் - உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீள்கிலா நரகில் வீழ்வார் - மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார். |
மய்-மை, குற்றம். மை, கையன் என்பன எதுகை நோக்கி மய், கய்யன் என வந்தது. மீள்கிலா - மீளமுடியாத உலகத்தார் உண்டென்பதில் லென்பான்... அலகையா வைக்கப்படும்" என்ற குறள் (850) ஒப்பு நோக்கத்தக்கது. |
(114) |
6479. | 'சீதையைக் குறித்ததேயோ, "தேவரைத் தீமை செய்த |
| பேதையைக் கொல்வேன்" என்று பேணிய விரதப் |
| பெற்றி? |
| வேதியர், "அபயம்!" என்றார்க்கு, அன்று, நான் |
| விரித்துச் சொன்ன |
| காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் |
| ஆமோ? |