தேவரைத் தீமை செய்த பேதையை- தேவர்களைத் துன்புறுத்திய அறிவில்லாத இராவணனை; கொல்வேன் என்று பேணிய விரதப் பெற்றி- கொல்லுவேன் என்று நானே விரும்பி ஏற்றுக்கொண்ட இந்த விரதத்தின் தன்மை; சீதையைக் குறித்ததேயோ - சீதையை மீட்டு வருதலைமட்டும் குறித்ததொன்றோ? அல்ல; வேதியர் அபயம் என்றார்க்கு - அந்தணர்கள் என்னை அடைந்து அடைக்கலம் என்றவர்களுக்கு; அன்று நான் விரித்துச் சொன்ன - அவர்கள் சரணடைந்த போது நான் விவரித்துக் கூறிய; காதையைக் குறித்து நின்ற - செய்தியைப் பற்றி நின்ற; அவ்வுரை கடக்கலாமோ - (அஞ்சல் என்று கூறிய) அந்தச் சொல்லை நான் மீறலாமோ? |
"அவதரித்துச் செய்த ஆணைத்தொழில்களெல்லாம் ஆசிரத விரோதிகளை அழிப்பதற்கே" என்ற வைணவச் சான்றோர் உரை நினையத்தக்கது. காதை - காதா (பாடல்) இங்கு செய்தியைக் குறித்தது. |
(115) |
6480. | 'காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச் |
| சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது |
| உண்டோ? |
| பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா |
| ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் |
| அம்மா! |
| |
காரியம் ஆக அன்றே ஆகுக - நாம் எடுத்த காரியம் முற்றுப் பெறட்டும்; அல்லது முடியாமல் போகட்டும்; கருணையோர்க்குச் சீரிய தன்மை நோக்கின் - கருணையாளர்க்குரிய சிறந்த தன்மையை ஆராய்ந்தால்; இதனின் மேல் சிறந்ததுண்டோ - அடைக்கலம் என்று வந்தவனை ஆதரித்துக் காக்கும் இதைவிட மேலானதொன்றுண்டோ? பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்கு - கீழ் மக்களாயினும் தங்களைச் சரணடைந்தவர்களுக்கு; பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார் - அழியாத தங்களது ஆருயிரைத் தந்தும் காத்தவர்கள்; எண்ணிலா அரசர் அம்மா- எண்ணிலடங்காத மன்னர்கள் (இவ்வுலகிலுண்டு). |
காரியம்-மேற்கொண்ட செயங். ஆக - ஆகட்டும் அன்றே ஆகுக-ஆகாமல் போகட்டும் சீரியதன்மை-சிறந்தபண்பு. பூரியர்- கீழ்மக்கள். |
(116) |