பக்கம் எண் :

262யுத்த காண்டம் 

கைபுகற்கு அமைவது ஆனான், 'கடிதினின்

கொணர்வல்' என்னா,

மெய்யினுக்கு உறையுள் ஆன ஒருவன்பால்

விரைவின் சென்றான்.

 

ஐயுறவு  எல்லாம்   தீரும் அளவையாய்- (சுக்கிரீவன்)
மனதிலெண்ணிய   ஐயமெல்லாம்      தீர்ந்து     ஒளியத்தக்க
பிரமாணமாக; அமைந்தது   அன்றே-  அமைந்ததொன்றாக;
தெய்வநாயகனதுள்ளம்- தெய்வங்களுக்கெல்லாம் நாயகனாகிய
இராமபிரானுடைய உள்ளம்; தேறிய அடைவே தேறி- தெளிந்த
முறையே நானும்தெளிவு பெற்று; கைபுகற்கு அமைவதானான்-
வீடணன் நம்பக்கம் சேருதற்கு உடன்படுவானானான்; கடிதினில்
கொணர்வல் என்னா
- விரைவில் அவனை இங்கு  அழைத்து
வருவேன்  என்று; மெய்யினுக்கு உறையுளான ஒருவன் பால்
விரைவில்   சென்றான் 
  -   உண்மைக்கு   உறைவிடமான
ஒப்பற்றவனாகிய வீடணனிடம் விரைந்து சென்றான்.
 

அளவை - பிரமாணம்.  அடைவு  -  முறைமை. அமைவது-
உடன்படுவது. இலங்கையில் மெய்தங்குவதற்கு புகலிடமளித்தவன்
வீடணன் என்பதால் "மெய்யினுக்கு உறையுள்" என்றார். 
 

(118)
 

சுக்கிரீவன் வருகையை அறிந்து வீடணன் எதிர் செல்லுதல்
 

6483.

வருகின்ற கவியின் வேந்தை, மயிந்தனுக்கு இளைய

வள்ளல்,

' "தருக!" என்றான்; அதனால், உன்னை எதிர் 

கொளற்கு அருக்கன் தந்த,

இரு குன்றம் அனைய தோளான் எய்தினன்'  

என்னலோடும்,

திரிகின்ற உள்ளத்தானும், அகம் மலர்ந்து, அவன் 

முன் சென்றான்.

 

வருகின்ற கவியின் வேந்தை -   (வீடணனை அழைத்துச்
செல்ல)  வருகின்ற வானர வேந்தனான சுக்கிரீவன்; மயிந்தனுக்கு
இளைய  வள்ளல்
- மயிந்தனுக்குத் தம்பியான துமிந்தன்; 'தருக'
என்றான்  
-   (வீடணனிடம்)   உன்னை   அழைத்து வருமாறு
இராமபிரான் கூறினான்; அதனால் உன்னை எதிர் கொளற்கு -