பக்கம் எண் :

 வீடணன் அடைக்கலப் படலம் 263

அதனால் உன்னைச் சந்திப்பதற்கு; அருக்கன் தந்த  - சூரியன்
புத்திரனாக தந்த; இருகுன்றம் அனைய தோளான்  - இரண்டு
மலைகளை  ஒத்த  தோள்களை   உடையவனான   சுக்கிரீவன்;
எய்தினன்   என்னலோடும் 
-  இங்கு வந்தான் என்றவுடன்;
திரிகின்ற உள்ளத்தானும்
- இராமபிரான் ஏற்றுக்கொள்வானோ
மாட்டானோ என நினைத்து அலையும் மனத்தினனான வீடணன்;
அவன் முன் சென்றான்- சுக்கிரீவனுக்கு முன்பு சென்றான்.
 

கவியின்   வேந்து-சுக்கிரீவன்.   தருகஎன்றான்-தருகென்றான்
என நின்றது. இராமன் தன்னை ஏற்றுகொள்வானோ? மாட்டானோ
என்ற ஐயத்தால் ஒரு நிலையில் நில்லாது   அலைந்த   மனத்தை
"திரிகின்ற உள்ளம்" என்றார்,  துமிந்தன்  'தருகென்றான்'   என்று
சொல்லக் கேட்டதும் வீடணன் மனம் மகிழ்ந்தது   என்பதனை "
அகம் மலர்ந்து" என்றார். 
 

(119)
 

சுக்கிரீவனும் வீடணனும் தழுவிக் கொள்ளுதல்
 

6484.

தொல் அருங் காலம் எல்லாம் பழகினும், தூயர்

அல்லார்

புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த

ஞான்றே;

ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு 

நாள் உற்ற

எல்லியும் பகலும் போல, தழுவினர், எழுவின் 

தோளார்.

 

தொல்அருங்  காலமெல்லாம்   பழகினும் -   நீண்ட
நெடுங்காலம்   நெருங்கிப்   பழகி வந்தாலும்; தூயர் அல்லார்
புல்லர்
-   மனத்தூய்மையில்லாதவர்கள்    ஒன்றுபடமாட்டார்;
உள்ளம்   தூயார்   எதிர்ந்த   ஞான்றே பொருந்துவர்
-
தூயமனம்   கொண்ட      மேலோர்   சந்தித்த   அப்போதே
ஒன்றிவிடுவர்; ஒல்லை வந்து   உணர்வும் ஒன்ற - விரைந்து
வந்து, ஒத்த உணர்வுடன்   சந்தித்த;  இருவரும் - சுக்கிரீவன்,
வீடணன் ஆகிய இருவரும்;   ஒருநாள்   உற்ற   எல்லியும்
பகலும் போல
- ஒருநாளில் பொருந்திய இரவும் பகலும் போல;
எழுவின் தோளார் தழுவினர்
- தூண் போன்ற தோளினராகிய
அவர்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர்.