என்றான். இந்த அபயம் எக்குறையும் இல்லாதது என்பான், வழுவல் இல் அபயம் (என்றும் மாறாதது) என்றான். பெறுதற்கரிய பேற்றினை விரைந்து பெறுக என்பான் 'விரைவின் தொழுதி" என்றான். |
(121) |
வீடணன் கொண்ட மகிழ்ச்சி |
6486. | சிங்க ஏறு அனையான் சொன்ன வாசகம் செவி |
| புகாமுன், |
| கங்குலின் நிறத்தினான்தன் கண் மழைத் தாரை |
| கான்ற: |
| அங்கமும் மனம்அது என்னக் குளிர்ந்தது; அவ் |
| அகத்தை மிக்குப் |
| பொங்கிய உவகை என்னப் பொடித்தன, உரோமப் |
| புள்ளி. |
| |
சிங்க ஏறு அனையான் - ஆண் சிங்கத்தைப் போன்றவனான சுக்கிரீவன்; சொன்ன வாசகம்- கூறிய சொற்கள்; செவிப்படாமுன் - தனது காதுகளில் வீழ்வதற்கு முன்பே; கங்குலின் நிறத்தினான் தன்- இரவு இருள் போன்ற நிறம் உடைய வீடணனது; கண் மழைத்தாரை கான்ற - கண்கள் மழைத்தாரையொத்த நீரைப் பொழிந்தன; அங்கமும் மனமதென்னக் குளிர்ந்தது - அவனது உடல் முழுதும் மனம்போலக் குளிர்ந்தது; அவ்வகத்தை மிக்குப் பொங்கிய உவகை என்ன - அந்த மனத்தில் நிறைந்து பொங்கிய மகிழ்ச்சியைப் போல; உரோமப்புள்ளி பொடித்தன - மயிர்க்கூச்செறிந்தன. |
மகிழ்ச்சியால் மனம் குளிர்ந்தது போல உடலும் குளிர்ந்தது என்பதும் உள்ளத்தே எழுந்த உவகையை உரோம புளகாங்கிதத்தால் உடல் வெளிப்படுத்தியது என்பதும் தண்ணீர் வழிந்தது என்பதும் உவகை மெய்ப்பாடுகளாம். |
(122) |
6487. | ' "பஞ்சு" எனச் சிவக்கும் மென் கால் தேவியைப் |
| பிரித்த பாவி |
| வஞ்சனுக்கு இளைய என்னை, "வருக!" என்று |
| அருள் செய்தானோ? |
| தஞ்சு எனக் கருதினானோ? தாழ் சடைக் கடவுள் |
| உண்ட |
| நஞ்சு எனச் சிறந்தேன் அன்றோ, நாயகன் அருளின் |
| நாயேன்? |