பக்கம் எண் :

270யுத்த காண்டம் 

என்பதை   'கழல்  அடைந்தோரை உயிரின் ஓம்பும் கருத்தினன்'
என்றார். உயிரின்-உயிரைவிட 'ஒழுக்கம் உயிரினும்  ஓம்பப்படும்'
என்ற குறளில் (131) இப்பொருள்  வந்தது   காண்க.   அருத்தி-
விருப்பம். தாழாது - காலம்தாழ்த்தாமல்.
 

(127)
 

6492.

மொய் தவழ் கிரிகள் மற்றும் பலவுடன் முடுகிச்

செல்ல,

மை தவழ் கிரியும் மேருக் குன்றமும் வருவது என்ன, 
செய் தவம் பயந்த வீரர், திரள் மரம் ஏழும் தீய
எய்தவன் இருந்த சூழல், இருவரும் எய்தச் சென்றார். 
 

மொய்   தவழ் கிரிகள் - வலிமை பொருந்திய மலைகள்;
மற்றும்   பலவுடன்   முடுகிச்   செல்ல   - வேறுபலவும்
தம்மைப்பின் தொடர்ந்து விரைந்து செல்ல; மைதவழ் கிரியும்-
மேகங்கள் தங்கிய பெரியதொரு மலையும்;- மேருக்குன்றமும்-
பொன்னிறமான மேருமலையும்;   வருவதென்ன  -   சேர்ந்து
வருவது   போல;  செய்தவம் பயந்த வீரர்- தாங்கள் செய்த
தவத்தால்   (இராமனைச்   சரணடையும்)   பயனைப்   பெற்ற
வீரர்களான வீடணனும், சுக்கிரீவனும்; திரள்   மரம்   ஏழும்
தீயஎய்தவன்
- திரண்டு நின்ற மராமரங்கள்   ஏழும்   தீய்ந்து
போகும்படி அம்பெய்தவனான இராமபிரான்;  இருந்த   சுழல்
இருவரும் எய்தச் சென்றார் 
- இருந்த   இடத்துக்கு அந்த
இருவரும் விரைந்து சென்றனர்.
 

மொய் - வலிமை.   தவழ் - பொருந்திய.   மைதவழ்கிரி -
வீடணனுக்குவமை. மேருக்குன்றம்-சுக்கிரீவனுக்குவமை. 
 

(128)
 

வீடணன் இராமபிரான் திருவடிகளில் விழுந்து வணங்குதல்
  

6493.

மார்க்கடம் சூழ்ந்த வைப்பின் இளையவன் மருங்கு

காப்ப,

நாற் கடல் உடுத்த பாரின் நாயகன் புதல்வன், நாமப்
பாற்கடல் சுற்ற, விற் கை வட வரை பாங்கு நிற்ப,
கார்க் கடல் கமலம் பூத்தது எனப் பொலிவானைக்

கண்டான்.
 

மார்க்கடம்   சூழ்ந்த வைப்பின் -  வானரவீரர்கள் சூழ்ந்து
நின்ற இடத்தில்; இளையவன் மருங்கு காப்ப - இளையவனாகிய
இலக்குவன் பக்கத்திலே நின்று பாதுகாக்க;   நாற்கடல் உடுத்த
பாரின் நாயகன் புதல்வன்
- நான்கு கடல்களாலும் சூழப்பட்ட