அமைந்ததாகிய; முத்து அரும்பு செம்மணி - முத்துக்கள் அரும்பிய சிவந்த மணி போன்ற; மணி பழுத்து அமைந்தவாய் - அழகு நிறைந்து விளங்கும் சீதாபிராட்டியின் திருவாயினை; மறக்க வல்லனோ - மறக்கும் வல்லமை உடையவனோ? வல்லன். |
சீதாபிராட்டியின் சிறந்த குண நலங்களை எப்போதும் நினைத்திருப்பதால் காம நோய் முதிர்ந்து பித்துப் பிடித்தது போன்ற மனத்தை உடைய இராமபிரான் முத்தரும்பிய செம்மணி போன்ற அழகிய சீதா பிராட்டியின் வாயை மறக்கவல்லனல்லன். |
(12) |
சுக்கிரீவன், இராமபிரானிடம் வீடணனோடு மேல் விளைவது குறித்து எண்ணுக எனல் |
6528. | ஆயது ஓர் அளவையின், அருக்கன் மைந்தன், 'நீ |
| தேய்வது என்? காரியம் நிரப்பும் சிந்தையை; |
| மேயவன்தன்னொடும் எண்ணி, மேல் இனித் |
| தூயது நினைக்கிலை' என்னச் சொல்லினான். |
| |
ஆயதோர் அளவையின் - (சீதையின் நினைவால் இராமன் வருந்திய) அத்தகைய நேரத்திலே; அருக்கன் மைந்தன்- சூரியகுமாரனான சுக்கிரீவன் (இராமபிரானை நோக்கி); நீ தேய்வது என்- (பெருமானே) நீ இவ்வாறு வருந்தித் தேய்வது என்ன பயனைக் கருதி; காரியம் நிரப்பும் சிந்தையை - செய்யவேண்டிய காரியங்களை எண்ணி நிறைவேற்றத் தக்க சிறந்த மனத்தை உடையவன் நீ (ஆதலின்); மேயவன் தன்னொடும் எண்ணி - நம்மை நாடி வந்துள்ள இலங்கை வேந்தனான வீடணனுடன் கலந்து சிந்தித்து; மேல் இனித் தூயது நினைக்கிலை - இனிமேல் நடக்க வேண்டிய நமக்கு நன்மைதரும் செயல்களை நினைக்காமலிருக்கிறாயே; என்னச் சொல்லினான் - என்று இராமபிரானிடம் கூறலானான். |
இராவணனைவென்று, சீதாபிராட்டியை மீட்கும் செயலை "தூயது" என்றான். இராமபிரான், செயற்கரியன செய்து முடிக்கும் மன வலிமை உடையவன் என்பதை "காரியம் நிரப்பும் சிந்தையை" என்றான். |
(13) |
6529. | அவ்வழி, உணர்வு வந்து, அயர்வு நீங்கினான், |
| 'செவ் வழி அறிஞனைக் கொணர்மின், சென்று' என, |