பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 297

'இவ்வழி வருதி' என்று இயம்ப, எய்தினான்-
வெவ் வழி விலங்கி, நல் நெறியை மேவினான். 
 

அல்வழி  உணர்வு  வந்து-   அப்பொழுது,  தன்னுணர்வு
வரப்பெற்று;  அயர்வு  நீங்கினான் -  மனத்துயர் நீங்கியவனான
இராமபிரான்; செவ்வழி அறிஞனைக் கொணர்மின் சென்றென-
நன்னெறி நின்று ஒழுகும் அறிஞனான வீடணனை அழைத்து வருக
என வானர வீரர்களுக்குக் கட்டளை இட; இவ்வழி வருதி என்று
இயம்ப
-   (சென்ற   வானரவீரர்கள்   வீடணனை   அடைந்து)
இராமபிரானிடம்   வருக    என்று   கூற;   வெவ்வழிவிலங்கி 
நல்நெறியை   மேவினான் 
-   தீய   நெறியிலிருந்து   நீங்கி,
நல்லநெறியைக்   கடைப்  பிடிப்பவனாகிய வீடணன்; எய்தினான்
- இராமபிரான் இருக்குமிடத்தை அடைந்தாள்.
 

இராமபிரான் அனுமனுக்குச் 'சொல்லின் செல்வன்' என்றொரு
பெயர்   சூட்டிய   திருவாயால் வீடணனை "செவ்வழி அறிஞன்"
என்றது   குறிப்பிடத்தக்கது.   இராமபிரான் கூற்றாகப்  போற்றிக்
கூறியது போதாதென்று கவிக் கூற்றாகவும்  'வெவ்வழி   விலங்கி
நன்னெறியை மேவினான்" என்றது குறிப்பிடத்தக்கது. 
 

(14)
 

இலங்கை பற்றி இராமன் வினவ வீடணன் விடை பகர்தல்
 

6530.

'ஆர்கலி இலங்கையின் அரணும், அவ் வழி
வார் கெழு கனை கழல் அரக்கர் வன்மையும்,
தார் கெழு தானையின் அளவும், தன்மையும்,
நீர் கெழு தன்மையாய்! நிகழ்த்துவாய்' என்றான்.
 

ஆர்கலி   இலங்கையின்   அரணும் -   கடல்  சூழ்ந்த
இலங்கையின்   மதில் முதலிய  பாதுகாப்புப் பற்றியும்; அவ்வழி
வார் கெழு கனைகழல் அரக்கர் வன்மையும்
- அங்கு நீண்டு
ஒலிக்கும்   வீரக் கழல் அணிந்தவர்களான இராவணன் முதலிய
அரக்கர்களின்   வலிமைபற்றியும்;   தார்   கெழு தானையின்
அளவும் தன்மையும்
- வெற்றி மாலை பொருந்திய இலங்கைப்
படையின் அளவு பற்றியும் தன்மை   பற்றியும்;   நீர்   கெழு
தன்மையாய்
- நற்குணங்கள்  உடையவனே;   நிகழ்த்துவாய்
என்றான் 
-  கூறுவாயாக   என,   இராமபிரான் வீடணனைக்
கேட்டான்.
 

நீர்மை   - நற்குணம் (தன்மையுமாம்) தார் - கொடிப்படை
(அணிவகுப்பில் முதலில் வரும்) தூசிப் படையுமாம்.
 

(15)