6531. | எழுதலும், 'இருத்தி' என்று இராமன் ஏயினான், |
| முழுது உணர் புலவனை; முளரிக் கண்ணினான் |
| பழுது அற வினவிய பொருளைப் பண்பினால் |
| தொழுது உயர் கையினான், தெரியச் சொல்லினான்: |
| |
எழுதலும்- (இராமன் கேட்டவைகளுக்கான விடை கூற வீடணன்) எழுந்தான், அவ்வாறு எழலும்; முழுதுணர் புலவனை - முற்றும் உணர்ந்த அறிஞனான வீடணனை;'இருத்தி' என்று இராமன் ஏயினான் - (உட்கார்ந்தே பேசலாம் என்ற எண்ணத்தால்) இருப்பாயாக என்று இராமபிரான் கூறினான்; முளரிக் கண்ணினான் - தாமரை மலர் போன்ற கண்களைஉடைய இராமபிரான்; பழுதற வினவிய பொருளை - குற்றம் நீங்கக் கேட்ட பொருள்களைப் பற்றியெல்லாம்; பண்பினால் தொழுதுயர் கையினான் - பண்போடு, தொழுதுயர்த்திய கைகளை உடையவனாக; தெரியச் சொல்லினான்- இராமபிரான் நன்கு தெரிந்து கொள்ள கூறுவானாயினான். |
போர் மேற்கொண்டு செல்லுதற்குமுன் பகைவனது வலிமையை ஆராய்ந்து அறிதல் வேந்தர்க்குரிய கடமை என்பதால் 'பழுதற வினவிய பொருள்' என்றார். சொல்லுதலில் கேட்பவர்க்குத் தெளிவு வேண்டுமென்பதால் "தெரியச் சொல்லினான்" என்றார். |
(16) |
இலங்கையின் அரண் |
6532. | 'நிலையுடை வட வரை குலைய நேர்ந்து, அதன் |
| தலை என விளங்கிய தமனியப் பெரு |
| மலையினை மும் முடி வாங்கி, ஓங்கு நீர் |
| அலை கடல் இட்டனன், அனுமன் தாதையே. |
| |
அனுமன்தாதை - அனுமானுடைய தந்தையாகிய வாயுதேவன் (காற்று); நிலையுடைவடவரை - நிலைத்ததன்மை கொண்ட வடமேருமலையை; குலைய நேர்ந்து - நிலைகுலைந்து சிதையும்படி செய்ய நினைத்து; அதன் தலை என விளங்கிய - அந்தவடமலையின் முடி என்று திகழ்ந்த; தமனியப் பெருமலையினை- பொன்மயமான பெரிய மேரு மலையை; மும்முடிவாங்கி - மூன்று சிகரங்களைப் பறித்து வாங்கி; ஓங்கு நீர் அலைகடல் இட்டனன்- நிறைந்த நீரையுடைய கடலிலே இட்டான். |