உடைய எமனையும் கூட; அரசு மாற்றுவார்- ஆட்சியை மாற்றித் தாமே ஆள வல்லவராவார். |
வலிய அவர்களது கொடுஞ் செயல் கூறும் தரமல்ல என்பார் "கொடுமை கூறி என்" என்றார். 'அரசு மாற்றுவார்' என்பதற்கு அரசை அழிக்க வல்லவர் என்று கூறினும் பொருந்தும். மாற்றுதல் - அழித்தலாம். |
(22) |
6538. | 'கீட்டிசை வாயிலின் வைகும் கீழவர் |
| ஈட்டமும் எண்-இரு கோடி என்பரால்; |
| கோட்டு இருந் திசை நிலைக் கும்பக் குன்றையும் |
| தாள் துணை பிடித்து, அகன் தரையின் எற்றுவார். |
| |
கீழ்த்திசை வாயிலின் வைகும் கீழவர்- கிழக்குத் திசையிலுள்ள வாயிலில் காவல் புரிந்திருக்கும் கீழ்மக்கள்; ஈட்டமும் எண்இரு கோடி என்பரால் - கூட்டமும் பதினாறுகோடி; கோட்டு - வலியதந்தங்களை உடைய; இருந்திசை நிலை - அகன்ற எட்டுத் திசைகளிலும் நிலைத்து நிற்கும்; கும்பக் குன்றையும்- மத்தகத்தையுடைய மலைபோன்ற திக்கு யானைகளையும்; தாள் துணை பிடித்து- அவற்றின் இரு கால்களையும் பிடித்துத் தூக்கி; அகன் தரையின் எற்றுவார் - தரையிலே மோதியடித்துக் கொல்லும் வல்லமை உடையவர்கள்; அகன்தரை-அகன்ற தரையிடம். |
'கீழ்த்திசை' என்பது எதுகை நோக்கி 'கீட்டிசை" எனத் திரிந்தது. கும்பம் - மத்தகம். திக்கு யானைகளின் கால்களைப் பிடித்து, மேலே தூக்கித் தரையில் மோதிக் கொல்லவும் வல்லவர்கள் என்பது கருத்து. |
(23) |
6539. | 'விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர் |
| எண்-இரு கோடியின் இரட்டி என்பரால்; |
| மண்ணிடை வானவர் வருவர் என்று, அவர் |
| கண் இலர், கரை இலர், கரந்து போயினார். |
| |
விண்ணிடை விழித்தனர் நிற்கும் வெய்யவர் - வானத்திலே தேவர்கள் வரக்கூடும் என்பதால் உறங்காமல் கண் விழித்தவர்களாக நின்று காவல் புரியும் கொடியவர்; எண் இரு கோடியின் இரட்டி என்பரால் - பதினாறு கோடியின் இரண்டு மடங்கான முப்பத்திரண்டு கோடி என்பார்கள்; மண்ணிடை வானவர் வருவர் என்று - மண்ணுலகத்துக்கு தேவர்கள் வருவார் என்று கருதி; |