பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 303

கண்ணிலர் -   ஒரு  சிறிதும் கண்ணோட்டம் இல்லாதவர்களாய்;
கரந்து போயினார்-   தமது  வடிவத்தை மறைத்துக் கொண்டு,
வேறு  வடிவத்திலே   உலாவுபவர்கள்;     கரை     இலர் -
அளவற்றவராவர்.
 

நான்கு திசையிலும் வாயில்களைக் காவல் காப்பவர்களைத்தவிர,
விண்ணிலும் நின்று காவல்   புரிந்தனர்.    கண் - கண்ணோட்டம்.
சிறிதும் கண்ணோட்டமில்லாத கொடியவர்கள் என்பதால் 'கண்இலர்'
என்றார்; இரக்கம் சிறிதுமில்லாதவர்கள் என்பது பொருள். தேவர்கள்
வருவார்கள் என்பதால் அவர்களுக்குப் புலனாகாதபடி   வடிவத்தை
மறைத்து, வேறு  வடிவத்திலே   இருந்தனர்   என்பதால்   'கரந்து
போயினார்' என்றார். 
 

(24)
 

6540.

'பிறங்கிய நெடு மதில் பின்னும் முன்னரும், 
உறங்கலர், உண் பதம் உலவை ஆதலால்,
கறங்கு எனத் திரிபவர் கணக்கு வேண்டுமேல்,
அறைந்துளது ஐ-இரு நூறு கோடியால்.
 

பிறங்கிய நெடுமதில்  - விளங்கித் தோன்றும் அந்த நீண்ட
மதிலின்;      பின்னும்     முன்னரும்-     பின்புறத்திலும், 
முன்புறத்திலுமாக;   உறங்கலர்   -   சிறிதும்  உறங்காதவராய்; 
உண்பதம் உலவை ஆதலால்- அவர்கள்  உண்ணும்   உணவு
காற்று ஆதலால்; கறங்கெனத் திரிபவர்- அந்தக் காற்றை நாடிக்
காற்றாடி   போலத்   திரிவார்கள்;    கணக்கு   வேண்டுமேல்
-   அவர்களது   எண்ணிக்கை  வேண்டுமானால்; அறைந்துளது
ஐயிரு கோடி
- நூறு கோடி என்று சொல்லப்பட்டுள்ளது.
 

பதம்   -    உணவு.   உலவை - காற்று. கறங்கு - காற்றாடி.
காற்றாடியைப்   போலச்     சுழன்று    திரிந்த   காவலர்களின்
செயலுக்குக் காரணம் கூறுபவரைப் போல    "உண்பதம் உலவை
ஆதலால் கறங்கெனத் திரிபவர்" என்றார். 
 

(25)
 

6541.

'இப்படி மதில் ஒரு மூன்று; வேறு இனி
ஒப்ப அரும் பெருமையும் உரைக்க வேண்டுமோ?
மெய்ப் பெருந் திரு நகர் காக்கும் வெய்யவர்
முப்பது கோடியின் மும்மை முற்றினார்.
 

இப்படி மதில் ஒரு மூன்று - இத்தகைய  கட்டுக்  காவலை
உடைய   மதில்கள்   மூன்றாகும்;   வேறு    இனி   ஒப்பரும்
பெருமையும்
- இதை   விட வேறாக   அந்த மதில்களின் ஒப்பற்ற
பெருமையை; உரைக்க   வேண்டுமோ  -   விரிவாகக்  கூறவும்
வேண்டுமோ?; மெய்ப்