பக்கம் எண் :

304யுத்த காண்டம் 

பெரும் திருநகர் - உண்மையான பெருமைமிக்க அந்த அழகிய
இலங்கை  நகரை;   காக்கும்   வெய்யவர் - காவல் காக்கும்
கொடியவர்கள்;   முப்பது   கோடியின் மும்மை முற்றினார்-
தொண்ணூறு கோடிபேர் என நிறைந்துள்ளனர்.
 

இப்படி,   மேலே   கூறியபடி,   உண்மையாகவே இலங்கை
பெருந்திருநகர் என்பார்  'மெய்ப் பெரு'   என்றார்.   இலங்கை
அழகிய   நகராதலின்   'திருநகர்'   என்றார்.     'பிறந்த ஊர்' 
என்பதாலும்   வீடணன்       'திருநகர்'     எனச்சிறப்பித்துக் 
கூறினானென்க.   முப்பது   கோடியின்   மும்மை   - முப்பது
கோடியின் மூன்று மடங்கு. முற்றுதல். நிறைதல். 
  

(26)
 

6542.

'சிறப்பு அவன் செய்திடச் செல்வம் எய்தினார்,
அறப் பெரும் பகைஞர்கள், அளவு இல் ஆற்றலர்,
உறப் பெரும் பகை வரின் உதவும் உண்மையர்,
இறப்பு இலர், எண்-இரு நூறு கோடியே.
 

சிறப்பு   அவன்   செய்திட- அந்த இராவணன் சிறப்புச்
செய்ய;   செல்வம்     எய்தினார்-   அவனால்   செல்வம்
அடைந்தவர்களும்;   அறப்பெரும் பகைஞர் -   அறத்துக்குப்
பெரிய   பகைவர்களாய் உள்ளவர்களும்; அளவு இல் ஆற்றலர்
-  அளவில்லாத வலிமை உடையவர்களும்; உறப் பெரும் பகை
வரின்
- அந்த இராவணனுடன்    போரிடப்    பெரும்பகைவர்
வருவாராயின்;   இறப்பிலர் -     எப்போதும்   இராவணனது
கட்டளையை மீறாதவர்களுமானவர்கள்; எண் இரு கோடியே -
பதினாறு கோடி பேராவார்.
 

சிறப்பு:   பெருமை.   இராவணனால்   சிறப்புப்    பெற்றுச்
செல்வம் எய்தியவர்கள். "பகை உறவரின்" பகைவர்   யாரேனும்
இராவணனுடன் போரிட வந்தால்; உடனே அவனுக்கு   உதவும்
உண்மையானவர்கள் என்பதால் 'உதவும் உண்மையர்' என்றார். 
  

(27)
 

கோயில் வாயிலின் காவலர்
 

6543.

' "விடம் அல, விழி" எனும் வெகுளிக் கண்ணினர்,
"கடன் அல, இமைத்தலும்" என்னும் காவலர்,
வட வரை புரைவன கோயில் வாயிலின்
இடம் வலம் வருபவர், எண்-எண் கோடியால்.
  

விடம் அல விழி எனும்- இவை விடம் அல்ல  விழிகள்தான்
என்று கூறும்படி; வெகுளிக் கண்ணினர்- கோபம் மிக்க கண்களை