உடையவர்கள்; இமைத்தலும் கடன் அல - கண்களை இமைப்பதும் நமது கடமையல்ல; என்னும் காவலர் - என்று கூறும்படி காவல் காப்பவர்கள்; வட வரை புரைவன - வட வரையான மேரு மலையைப் போன்றனவாகிய; கோயில் வாயிலின்- இராவணனுடைய அரண்மனை வாயிலில்; இடம் வலம் வருபவர்- இடதுசாரி, வலது சாரியாகத் திரிந்துவருகின்றவர்கள்; எண்ணெண் கோடி- அறுபத்து நான்கு கோடிப் பேராவர். |
கோபம் கொண்டு விழிக்கும் காவலர்களின் கண்கள் விடம் போன்ற கொடியவை என்பதால் 'விடம் அல விழி' என்றார். காவல் புரிபவர் கண்களை இமைத்தலும் கடமைதவறியதாகும் என்பதால் "கடன் அல இமைத்தலும்" என்றார். வடவரை - மேருமலை. கோயில் - அரண்மனை. |
(28) |
6544. | 'அன்றியும், அவன் அகன் கோயில் ஆய் மணி |
| முன்றிலின் வைகுவார் முறைமை கூறிடின். |
| ஒன்றிய உலகையும் எடுக்கும் ஊற்றத்தார்; |
| குன்றினும் வலியவர்; கோடி கோடியால். |
| |
அன்றியும் அவன் அகன் கோயில் - அல்லாமலும் அந்த இராவணனுக்குரிய விசாலமான அரண்மனையில்; ஆய்மணி முன்றிலின் - ஆராய்ச்சி மணி கட்டப்பட்டுள்ள முற்றத்திலே; வைகுவார் முறைமை கூறிடின் - தங்கிக் காவல் புரிபவர்களின் தன்மையைக் கூறுவோமாயின்; ஒன்றிய உலகையும் - ஒன்றாக உள்ள உலகத்தை எல்லாம்; எடுக்கும் ஊற்றத்தார் - தமது கைகளால் தூக்கவல்ல ஆற்றல் உள்ளவர்களும்; குன்றினும் வலியவர் - மலையினும் வலிமைமிக்கவர்களும் ஆகிய வீரர்கள்; கோடி கோடியே - கோடி கோடிப் பேராவர். |
அரசர்கள் வாழுமிடமும் 'கோயில்' என்பது மரபு. ஆய்மணி - ஆராய்ச்சிமணி, அரசர்களின் அரண்மனை வாயிலில் ஆராய்ச்சி மணி கட்டுதல் உண்டென்பது 'வாயிற்கடைமணி நடு நா நடுங்க' எனவரும் சிலப்பதிகார உரையால் புலப்படும். |
(29) |
படைகளின் அளவு |
6545. | 'தேர் பதினாயிரம் பதுமம்; செம் முகக் |
| கார்வரை அவற்றினுக்கு இரட்டி; கால் வயத்து |