பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 307

என்பதால்   'ஆழியாய்' என்றான். சக்கரப் படையுடைய  திருமால்
என்ற   நினைப்பிலே   கூறியதுமாம்.  உலகமுள்ள    நாளெலாம்
அழித்தாலும்   அழித்துக்    கொண்டே இருக்கலாம்   என்பதை
'நாளெலாம் தேயினும் தேய்க்க வேண்டுவது' என்றான்.
 

(31)
 

இராவணன் துணைவர் பெருமை
 

6547.

'இலங்கையின் அரண் இது; படையின் எண் இது;
வலங் கையில் வாள் சிவன் கொடுக்க வாங்கிய
அலங்கல் அம் தோளவன் துணைவர், அந்தம் இல்
வலங்களும் வரங்களும், தவத்தின் வாய்த்தவர்.
 

இலங்கையின் அரண் இது- இலங்கை  மதிலின் பெருமை
இது;   படையின் எண் இது - படைகளின் எண்ணிக்கை இது;
வலங்கையில்   வாள்
-   இராவணன் தனது வலது கையிலே
தாங்கியுள்ளவாள்; சிவன் கொடுக்க வாங்கிய- சிவபிரான் தரப்
பெற்றுக்   கொண்ட;   அலங்கல் அம் தோளவன் - வெற்றி
மாலை சூடிய   அழகிய   தோள்களை  உடைய இராவணனது;
துணைவர்
-   தம்பிமார்கள்;   அந்தம்   இல்வலங்களும்-
அழிவில்லாத வலிமைகளும்;   வரங்களும் -  பலவகையான
வரங்களும்; தவத்தின்   வாய்த்தவர்   -  தாம் செய்த தவ
பலத்தாலே வாய்க்கப் பெற்றவராவர்.
 

தாம் செய்த தவ பலத்தாலே   வாய்க்கப்   பெற்றவராவர். 
சிவபிரான் தந்த 'சந்திரகாசம்' என்ற வாளை   வலது   கையில்
கொண்டவன் என்று இராவணன் தவச்   சிறப்பின்    வழிவந்த
வலிமையையும் குறிப்பிட்டான். 
 

(32)
 

கலித்துறை
 

6548.

'உகம் பல் காலமும் தவம் செய்து பெரு வரம்

உடையான்,

சுகம் பல் போர் அலால் வேறு இலன், பெரும் படைத்

தொகையான்,

நகம் பல் என்று இவை இல்லது ஓர் நரசிங்கம்

அனையான்.

அகம்பன் என்று உளன்; அலை கடல் பருகவும் 

அமைவான்.