உகம் பல் காலமும் தவம் செய்து - பலயுகங்கள் தவம் செய்து; பெருவரம் உடையான் - பெரிய வரங்களைப் பெற்றிருப்பவனும்; சுகம் பல்போரலால் வேறிலன்- பல போர்களைச் செய்வதை விட வேறு இன்ப மில்லாதவனும்; பெரும்படைத் தொகையான்- பெரிய படையை உடையவனும்; நகம் பல் என்றிவை இல்லதோர்- நகம், பல் என்பவைகளைப் பெற்றிருக்காத ஒரு; நரசிங்கம் அனையான்- நரசிங்கத்தைப் போன்றவனும் ஆன; அகம்பன் என்றுளன் - ' அகம்பன்' என்ற பெயர் கொண்ட ஒரு அரக்கர்தலைவன் உள்ளான்; அலை கடல் பருகவும் அமைவான் - அலைகளை உடைய கடல்நீர் முழுவதையும் குடிக்கவும் வல்லவன். |
அகம்பன் இராவணனுக்கு மாமன்முறைதான். |
(33) |
6549. | 'பொருப்பை மீதிடும் புரவியும், பூட்கையும், தேரும், |
| உருப்ப விற் படை, ஒன்பது கோடியும் உடையான், |
| செருப் பெய் வானிடைச் சினக் கடாய் கடாய் வந்து |
| செறுத்த |
| நெருப்பை வென்றவன், நிகும்பன் என்று உளன், ஒரு |
| நெடியோன். |
| |
பொருப்பை மீதிடும் - மலைகளையும் மீதிட்டுச் செல்லும்; புரவியும் பூட்கையும் தேரும் - குதிரைகளும், யானைகளும், தேர்களும்; உருப்ப விற்படை - சினம் மிக்க விற்படையினரான காலாட்படை வீரர்களும்; ஒன்பது கோடியும் உடையான்- ஒன்பது கோடியை உடையவனும்; வானிடை செருப்பெய் சினக்கடாய்- வானத்திலே போர்புரிந்த சினம்மிக்க ஆட்டுக் கடாவினை; கடாய் வந்து செறுத்த - வாகனமாகச் செலுத்தி வந்து போரிட்ட; நெருப்பை வென்றவன் - அக்கினி தேவனை வென்றவனும்; நிகும்பன் என்று உளன் ஒரு நெடியோன் - சிறந்த வீரனுமான நிகும்பன் என்பவனும் உள்ளான். |
இங்குக் கூறப்படும் நிகும்பனும், அடுத்த பாடலில் வரும் கும்பனும் கும்பகர்ணனுடைய பிள்ளைகள் என்று வான்மீகம் கூறும். மீதிடும் - தாண்டிச் செல்லும். உருப்ப - கோபம் கொண்ட கடாய் - செலுத்தி அக்கினி தேவனுக்கு ஆட்டுக்கடாவாகனம் என்பர். அந்த நெருப்புக் கடவுளையும் வென்றவன் நிகும்பன். |
(34) |