6550. | 'தும்பி ஈட்டமும் இரதமும், புரவியும், தொடர்ந்த |
| அம் பொன் மாப் படை ஐ-இரு கோடி கொண்டு |
| அமைந்தான், |
| செம் பொன் நாட்டு உள சித்தரைச் சிறையிடை |
| வைத்தான். |
| கும்பன் என்று உளன்; ஊழி வெங் கதிரினும் |
| கொடியான். |
| |
தும்பி ஈட்டமும், இரதமும் புரவியும்- யானைக் கூட்டமும், தேர் குதிரை ஆகியவற்றுடன்; தொடர்ந்த அம்பொன் மாப்படை - சேர்ந்த அழகிய பொன் போன்ற அரிய பெரிய படை; ஐயிரு கோடி கொண்டமைந்தான்- பத்துக் கோடி பேரைக் கொண்டு அமைந்தவனும்; செம்பொன் நாட்டுள சித்தரை - செம்பொன் நாடாகிய தேவ உலகில் வாழும் சித்தர்களை; சிறையிடை வைத்தான் - போரில் வென்று சிறையிலே வைத்தவனுமான; ஊழி வெங்கதிரினும் கொடியான் - யுகாந்த காலத்துச் சூரியனை விடவும் கொடியவன்; கும்பன் என்று உளன் - கும்பன் என்பவனும் இருக்கிறான். |
தும்பி - யானை. செம்பொன் - சிவந்த பொன். பொன் நாடு- தேவர்கள் உலகம்.சித்தர் என்பார் தேவர்களில் ஒருவகைப் பிரிவினராவர். சித்தர்களைவென்று சிறையில் வைத்தவன் கும்பன். 'ஊழிவெங்கதிர்" ஊழிக் காலத்தின் இறுதியில் உலகை அழிக்கத் தோன்றும் வெப்பம் மிக்க சூரியன். அந்தப் பரிதியை விடவும் கொடியவன் கும்பன் என்பது கருத்து. |
(35) |
6551. | 'பேயை யாளியை யானையைக் கழுதையைப் |
| பிணித்தது |
| ஆய தேர்ப் படை ஐ-இரு கோடி கொண்டு |
| அமைந்தான் |
| தாயைஆயினும் சலித்திடு வஞ்சனை தவிரா |
| மாயையான் உளன், மகோதரன் என்று ஒரு |
| மறவோன். |
| |
பேயை யாளியை யானையை- பேய்களையும், யாளிகளையும் யானைகளையும்; கழுதையைப் பிணித்த தாய - கழுதைகளையும் பூட்டியதாகிய; தேர்ப்படை ஐயிரு கோடி கொண்டமைந்தான்- தேர்ப்படைபத்துக் கோடியை யுடையவன்; தாயை ஆயினும் |