பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 311

கூற்றாகவும்   (9125)   கம்பர் கூறுவது கருதத்தக்கது 'நெடும்
பல்முறை' என்பதற்கு 'பண்டு பல்முறை'   என்பதொரு    பாடம்
உண்டு. அது பொருந்தும்.  எயிறு - பற்கள்   நெடும் -   நீண்ட
வெய்யோன் - கொடியவன். 
 

(37)
 

6553.

' "மண் உளாரையும் வானில் உள்ளாரையும் 

வகுத்தால்,

உண்ணும் நாள் ஒரு நாளின்" என்று ஒளிர் 

படைத் தானை

எண்ணின் நால்-இரு கோடியன், எரி அஞ்ச 

விழிக்கும்

கண்ணினான், உளன், சூரியன்பகை என்று ஓர் 

கழலான்.

 

மண்ணுளாரையும் வானிலுள்ளாரையும் - மண்ணுலகத்தில்
உள்ளவர்களையும்,     விண்ணுலகத்தில்    உள்ளவர்களையும்;
வகுத்தால் உண்ணும் நாள் ஒரு நாளின் என்று -  சேர்த்து
வகைப்படுத்தி வைத்தால் அனைத்தையும்   உண்ணும்நாள் ஒரு
நாள்    என்று   கூறத்தக்க; ஒளிர்படைத்தானை - ஒளிவீசும்
படைக்கலங்களை  உடைய   சேனை;   எண்ணின்   நாலிரு
கோடியன்
-  எண்ணினால் எட்டிக் கோடி உடையவனாவான்;
எரிஅஞ்ச விழிக்கும் கண்ணினான்- நெருப்பும் அஞ்சுமாறு
விழிக்கும்  கண்களை உடையவன்; சூரியன் பகை என்றோர்
கழலான் உளன்
- சூரியன் பகைஞன்   என்ற  பெயருடைய
கழலணிந்த வீரன் ஒருவன் உள்ளான்.
 

பிறரை அஞ்சச் செய்யும் வெப்பத்தை உடையது நெருப்பு
என்றால், அந்த நெருப்பும்  அஞ்சும்படி விழிக்கும் கண்களை
உடையவன் இந்தச் சூரியன் பகைஞன் (சூரிய விரோதி) 
 

(38)
 

6554.

'தேவரும், தக்க முனிவரும், திசைமுகன் முதலா 
மூவரும், பக்கம் நோக்கியே மொழிதர, முனிவான், 
தாவரும் பக்கம் எண்-இரு கோடியின் தலைவன்,
மாபெரும்பக்கன் என்று உளன், குன்றினும் வலியான். 
 

தேவரும் தக்க    முனிவரும் - தேவர்களும், தகுதியுடைய
முனிவர்களும்; திசைமுகன்  முதலா மூவரும் - பிரமன் முதலான
மும்மூர்த்திகளும்; பக்கம்    நோக்கியே   மொழிதர- (நேருக்கு
நேராக