பக்கம் எண் :

312யுத்த காண்டம் 

நின்று  பேசுவதற்கு   அஞ்சிப்)   பக்கம்  பார்த்தே   பேசுமாறு;
முனிவான் -   கோபம்  உடையவனும்; தாவரும் பக்கம் எண்
இரு   கோடியின் தலைவன் 
-   மிகுந்த  வலிமை கொண்ட
சேனையின் பதினாலு கோடி பேருக்குத் தலைவனும்; குன்றினும்
வலியான்
- மலையை விட வலியவனுமான; மாபெரும் பக்கன்
என்றுளன்
-   மாபெரும் பக்கன் என்னும் பெயருடைய ஒருவன்
உள்ளான்.
 

தாவரும் - வலிமை மிக்க பக்கம் - சேனை. பெரும் பக்கன்
படைத்   தலைவர்களுள்   முதன்மை   வாய்ந்தவன்; அவனது
வலிமையையும், தோற்றத்தையும் குறிப்பிட 'மலையினும் வலியன்'
என்றான். 
 

(39)
 

6555.

'உச் சிரத்து எரி கதிர் என உருத்து எரி முகத்தன்,
நச் சிரப் படை நால்-இரு கோடிக்கு நாதன்,
முச் சிரத்து அயில் தலைவற்கும் வெலற்கு அரு 

மொய்ம்பன்.

வச்சிரத்துஎயிற்றவன், உளன், கூற்றுவன் மாற்றான்.
 

உச்சிரத்து   எரி கதிர் என -  தலைக்கு மேலே எரிகின்ற
சூரியன் என்னும்படி; உருத்து எரி  முகத்தன் - சினந்து எரியும்
முகத்தை உடையவனும்; நச்சிரப்படை   நாலிரு   கோடிக்கு
நாதன் 
-   சிறந்த   தலைமை வாய்ந்த எட்டுக் கோடி பேரைக்
கொண்ட   படைக்குத்     தலைவனும்;    முச்சிரத்து அயில்
தலைவற்கும்
- முக்கவட்டுச் சூலத்தைஉடைய சிவபிரானுக்கும்;
வெலற்கு அரு மொய்ம்பன்
- போரில் வெல்லுதற்கரிய வலிமை
உடையவனும்;   கூற்றுவன் மாற்றான் -  எமனையும் எதிர்த்து
நிற்கவல்ல    பகைவனுமான; வச்சிரத்தெயிற்றவன் உளன் -
வச்சிரதந்தன் என்னும் பெயர் கொண்டவன் இருக்கிறான்.
 

உச்சிரம்   - தலைக்கு மேல் உச்சியில் எரிக்கும்   சூரியன்
வெப்பம் மிகுதியும்  உடையவன்.   அந்தப்   பரிதியை   ஒத்து
எரியும் முகத்தை உடையவன் என்பதை 'உருத்து எரி முகத்தன்'
என்றார். முச்சிரம் - மூன்று கவடுகள். தலைவன் -  சிவபிரான்.
'கூற்றுவன் மாற்றான்'  கூற்றுவனுக்குப்   பகைவன்.   வச்சிரம்
போன்ற    பற்களை   உடையவன்   என்பதால்   'வச்சிரத்து 
எயிற்றவன்" என்றார் 'வச்சிரதந்தன்' என்பது பெயராகும். 
 

(40)
 

6556.

'அசஞ்சலப் படை ஐ-இரு கோடியன், அமரின்
வசம் செயாதவன், தான் அன்றிப் பிறர் இலா வலியான்,