பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 313

இசைந்த வெஞ் சமத்து இயக்கரை வேரொடும் முன்  

நாள்

பிசைந்து மோந்தவன், பிசாசன் என்று உளன், ஒரு

பித்தன்.

 

அசஞ்சலப்படை ஐயிரு கோடியன்  -   பகைவரைக் கண்டு
நடுங்காத   தன்மையினரான   பத்துக் கோடி வீரர்களைக் கொண்ட
படையை    உடையவனும்; அமரின் வசம் செயாதவன்- போரில்
வெல்லப்படாதவன்;      தானன்றிப்    பிறர்   இலாவலியன்-
தானேயல்லாது  பிறர்   எவருமில்லாத   வலிமை   உடையவனும்;
இசைந்த வெஞ்சமத்து - தான் இசைந்து செய்த கொடிய போரில்;
இயக்கரை   வேரொடும்   முன்நாள் பிசைந்து மோந்தவன்-
இயக்கர்களை   முன் ஒரு   காலத்தில்   வேருடன்   அழியுமாறு
கைகளால் பிசைந்து முகர்ந்து பார்த்தவனும்; ஒரு பித்தன்- போர்
புரிவதே  நோக்கமான   பைத்தியம்   பிடித்தவனுமான; பிசாசன்
என்று உளன்
- பிசாசன் என்பவன் உள்ளான்.
 

அசஞ்சலப்படை -   பகைவரைக் கண்டு நடுங்காத   சேனை.
சஞ்சலம்  என்ற சொல்லின் எதிர்ப்பதம் 'அசஞ்சலம்' என்பதாகும்.
பிறர் எவராலும் வெல்லப்படாதவன் என்பதால் 'வசம் செயாதவள்'
என்றான். தான் பிறரை வெல்லவல்லவனே   அல்லாது   இவனை
வெல்லவல்லார்   பிறர்   எவருமில்லை   என்னும்படி   வலிமை
மிக்கவன் என்பதாம்.
 

(41)
 

6557.

'சில்லி மாப் பெருந் தேரொடும், கரி, பரி, சிறந்த
வில்லின் மாப் படை ஏழ்-இரு கோடிக்கு வேந்தன்,
கல்லி மாப் படி கலக்குவான், கனல் எனக் காந்திச்
சொல்லும் மாற்றத்தன், துன்முகன் என்று அறம்

துறந்தோன்.

 

சில்லிமாப்   பெரும் தேரொடும்  - சக்கரத்தை உடைய
பெரியதேர்ப் படையுடனே; கரி,   பரி,   சிறந்த   வில்லின்
மாப்படை
- யானை, குதிரை,   சிறந்த   வில் வீரர்களையுடைய
காலாட் படை என்ற;  ஏழ்  இரு   கோடிக்கு   வேந்தன் -
பதினான்கு   கோடிப்   பேர்     கொண்ட   பெரும்படைக்குத்
தலைவனும்; கல்லி   மாப்படி கலக்குவான்  - இந்தப் பெரிய
பூமியையேதோண்டி   எடுத்துக்    கலங்கச் செய்பவனும்; கனல்
எனக் காந்திச்  சொல்லும் மாற்றத்தன்
- தீயைப் போல்கனல்
காந்தும்படி பேசும் பேச்சை உடையவனும்;