பக்கம் எண் :

314யுத்த காண்டம் 

அறம்   துறந்தோன் -   அறச்  செயல்களை நீக்கியவனுமான;
துன்முகன் என்று- துன்முகன்   என்ற   பெயருடைய  ஒருவன்
உள்ளான்.
 

சில்லி - தேர்ச் சக்கரம். இந்தப் பெரிய பூமியையும் தோண்டி,
கலங்கச் செய்யும்  வல்லமை   பெற்றவன்   என்பதால்   'கல்லி
மாப்படை கலக்குவன்' என்றான். கனல்   தெறிக்கப்   பேசுபவன்
என்பதைக் 'கனல் எனக்காந்திச்  சொல்லும்   மாற்றத்தன்' என்று
குறித்தான். 
 

(42)
 

6558.

'இலங்கை நாட்டன்ன எறி கடல் தீவிடை உறையும்
அலங்கல் வேற் படை ஐ-இரு கோடிக்கும் அரசன், 
வலம் கொள் வாள் தொழில் விஞ்சையர் பெரும் புகழ்

மறைத்தான், 

விலங்குநாட்டத்தன் என்று உளன், வெயில் உக

விழிப்பான்.

 

இலங்கை   நாட்டன்ன -   இலங்கை  நாட்டைப் போன்று;
எரிகடல்   தீவிடை உறையும் -  அலையெறியும் கடல் நடுவே
அமைந்த தீவுகளிலே வாழ்கின்ற; அலங்கல் வேற்படை - மாலை
சூடிய வேற்படை வீரர்கள்; ஐயிரு கோடிக்கும் அரசன் - பத்துக்
கோடி   பேருடைய   படைக்குத் தலைவனும்; வலம் கொள்வாள்
தொழில்
- வலிமை    மிக்க    வாட்போரில் வல்ல; விஞ்சையர்
பெரும்புகழ் மறைத்தான்
-   விஞ்சையரோடு போரிட்டு வென்று,
அவர்களது  புகழைமறையுமாறு   செய்தவனும்;   வெயில்   உக 
விழிப்பான்
-   தீப்பொறி   பறக்க    விழிப்பவனும்;   விலங்கு
நாட்டத்தன் என்று உளன்
- வீரூபாக்கன் என்ற பெயர் கொண்ட
ஒருவன் உள்ளான்.
 

வாள் வேல் போன்றவைகளை மாலை சூட்டி அலங்கரிப்பதுண்டு.
'இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி' (புறம் 95) என்ற புறப்பாட்டாலும்
இதை அறியலாம். விஞ்சையர் - தேவருள் ஒரு   பிரிவினர்  விலங்கு
நாட்டத்தன் - விரூபாட்சன் என்பதன் தமிழ் ஆக்கமாகும். 
 

(43)
 

6559. 

'நாமம் நாட்டிய சவம் எனின், நாள் என்றும் ஒருவர்

 

ஈம நாட்டிடை இடாமல், தன் எயிற்றிடை இடுவான்,
தாமம் நாட்டிய கொடிப் படைப் பதுமத்தின் தலைவன், 
தூமநாட்டத்தன் என்று உளன், தேவரைத் துரந்தான்.