பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 315

நாமம் நாட்டிய சவம் எனின்- பிறருக்கு அச்சத்தைத் தரும்
வீரர்களின் பிணம் என்றால்; நாள் என்றும் ஒருவர் -  அதனைச்
சுடலைக்குக் கொண்டு செல்ல வேண்டிய நாளாயிற்றென்று ஒருவர்;
ஈம நாட்டிடை இடாமல்
  - சுடுகாட்டிலே   சென்று   புதைக்க
விடாமல்;   தன் எயிற்றிடை இடுவான் - தன் வாயிலே பெய்து
தின்பவனும்;   தாமம் நாட்டிய கொடிப் படை  - மாலை சூடி,
கொடிகளை உடைய சேனை; பதுமத்தின் தலைவன் -   பதுமம்
என்ற அளவையுடையவற்றின் தலைவனும்; தேவரைத் துரந்தான்
-   தேவர்களைப்   போரில்   வென்று விரட்டியவனுமாய;  தூம
நாட்டத்தன் என்றுளன்
- புகைக் கண்ணன் என்ற பெயருடைய
ஒருவன் உள்ளான்.
 

ஈமநாடு - சுடுகாடு. தூமாட்சன் என்ற வடமொழிப்  பெயரின்
தமிழாக்கமே; 'தூம   நாட்டத்தன்'   என்பது;   புகைக்கண்ணன்
எனலாம். 
 

(44)
 

6560.

'போரின் மத்தனும், பொரு வயமத்தனும், புலவர்
நீரின் மத்து எனும் பெருமையர்; நெடுங் கடற் 

படையார்;

ஆரும் அத்தனை வலி உடையார் இலை; அவரால்
பேரும், அத்தனை எத்தனை உலகமும்; பெரியோய் !
 

பெரியோய்   -   பெருமைமிக்கவனே; போரின் மத்தனும்
பொருவய மத்தனும்
- போர்த் தொழில்வல்ல மத்தனும், போரில்
வல்லவய   மத்தனும்   ஆகிய இருவரும்; புலவர் நீரின் மத்து
எனும்  பெருமையர்
- தேவர்கள் பாற்கடலில் இட்ட மத்தாகிய
மந்தரமலை   என்று சொல்லும் பெருமை உடையவர்கள்; நெடுங்
கடற்படையார்
  -   நீண்ட   பெரிய கடல் போன்ற படையை
உடையவர்கள்;   ஆரும்   அத்தனை   வலியுடையாரிலை -
இவர்களுக்கு  ஒப்பான வலிமை உடையவர்கள் யாருமே இல்லை;
அவரால்  அத்தனை   எத்தனை   உலகமும்   பேரும்
-
இவர்களால் எத்தனை உலகங்கள் உண்டோ அத்தனையும் நிலை
பெயர்ந்து கெட்டழிந்து போகும். 
 

'போரின்   மத்தன்,   பொருவயமத்தன்'   என்னுமிருவரும்
இரட்டையர்  போலும்.   பகைக்கடலைக்   கலக்கும்   மத்துப்
போன்றவராதலின்   இப்  பெயர் பெற்றனர் போலும். புலவர் -
தேவர்கள்.   நீர் - கடல்   இங்கு   பாற்கடலைக்   குறித்தது.
தேவர்களாகிய பாற்கடலைக்