கடைந்து கலங்கச் செய்யும் மத்துப் போன்றவர் என்பது கருதத்தக்கது பேரும் நிலை பெயர்ந்து. பெருமை மலை போன்றதாகிய உடற் பெருமை என்பதால் 'பெருமையோர்' என்றான். |
(45) |
சேனை காவலன் பிரகத்தன் |
6561. | 'இன்ன தன்மையர் எத்தனை ஆயிரர் என்கேன் - |
| அன்னவன் பெருந் துணைவராய், அமர்த் தொழிற்கு |
| அமைந்தார்? |
| சொன்ன சொன்னவர் படைத் துணை இரட்டியின் |
| தொகையான். |
| பின்னை எண்ணுவான், பிரகத்தன் என்று ஒரு |
| பித்தன்; |
| |
அன்னவன் பெருந்துணைவராய் - அந்த இராவணனுக்குப் பெரிதும் துணைநிற்பவராய்; அமர்த் தொழிற்கு அமைந்தார் - போர்த் தொழிலுக்கென அமைந்தவர்கள்; இன்ன தன்மையர் - இத்தகைய (முன்னர்க் கூறிய) ஆற்றல் மிக்கவர்; எத்தனை ஆயிரம் என்கேன் - எத்தனையாயிரம் பேருள்ளனர் எனக் கூறுவேன்; சொன்ன சொன்னவர் படை - முன்னே நான் சொன்னவர்களின் விவரித்துக் கூறிய படையினும்; துணை இரட்டியின் தொகையான் - இரண்டு மடங்கு எண்ணிக்கை உடையவனும்; பின்னை எண்ணுவான் - (எண்ணித்துணியாது) துணிந்த பின் எண்ணுபவனும் ஆன; பிரகத்தன் என்று ஒரு பித்தன்- பிரகத்தன் என்ற பெயருடைய ஒருவன் போரிடுவதில் பித்துடையவன் உள்ளான். |
இரட்டி - இரண்டு மடங்கு. எத்தனை ... என்கேன் - எவ்வளவு என்று சொல்வேன்? பெரும்படை உடையவன் என்பதால் தன்னம்பிக்கையால் முன்பு சிந்திக்காது பின்பு நினைப்பவன், துணிந்தபின் எண்ணுபவன் என்றான். பிரகத்தன் என்பவன் இராவணனது படைத்தலைவன்; போர் புரிவதில் பித்துடையவன் என்பதால் 'ஒரு பித்தன்' என்றான். |
(46) |
6562. | 'சேனை காவலன்; இந்திரன் சிந்துரச் சென்னி |
| யானை கால் குலைந்து ஆழி ஓர் ஏழும் விட்டு |
| அகல, |