பக்கம் எண் :

318யுத்த காண்டம் 

செம்பொன் மலையான பெரியமேருமலை; மதம் பட்டதாமெனத்
திரிந்தான்
- மதம் கொண்டு அலைந்தது   எனும்படி   எங்கும்
திரிந்தவன்;   பண்டு   தேவரைக்   குமைத்தான்   - முன்பு
தேவர்களையெல்லாம் அடியோடு அழித்த; கும்பகன்னன் என்று
உளன்
- கும்பகன்னன் என்ற பெயருடைய வீரன் உள்ளான்.
 

முற்பகல் அமாவாசைக்குப் பின் முதல் நாள், 'சந்திரர் நால்வர்'
என்றது பிறைச் சந்திரர் நான்கு பேர் சேர்ந்தது   போல விளங்கும்
நான்கு தந்தங்களை. கும்பம் - மத்தகம்.  இந்திரனுடைய ஐராவதம்.
அந்த யானையின் தந்தங்களை எவ்வித  முயற்சியுமின்றி சுலபமாகக்
கைப்பற்றினான் என்பதைக்   கழற்றி   என்றான். 'மேருமலை மதம்
கொண்டு திரிந்தது   போலத்   திரிந்தான்'  என்பது இல் பொருள்
உவமை குமைத்தல் - அழித்தல். 
 

(48)
  

இராவணனது புதல்வர்களின் ஆற்றல்
 

6564.

'கோள் இரண்டையும் கொடுஞ் சிறை வைத்த அக்

குமரன்

மூளும் வெஞ் சினத்து இந்திரசித்து என 

மொழிவான்;

ஆளும் இந்திரற்கு அன்னவன் பிணித்ததன் 

பின்னை.

தாளினும் உள, தோளினும் உள, இனம் தழும்பு.
 

கோள் இரண்டையும் - (கோள்கள் ஒன்பதிலும் முதன்மை
வாய்ந்த)   சூரியன்,    சந்திரன்   என்னும்    இரண்டினையும்;
கொடுஞ் சிறைவைத்த   அக்குமரன்-   கொடிய சிறையிலே
வைத்த   இராவணனது   மகனான;   மூளும் வெஞ்சினத்து -
மூண்டெழும் கொடிய  வெகுளியை உடைய; 'இந்திரசித்து' என
மொழிவான்
-   இந்திரசித்து   எனக்  கூறப்படுபவன்; ஆளும்
இந்திரற்கு
-   விண்ணுலகத்தை   ஆளும்   தேவேந்திரனுக்கு;
அன்னவன் பிணித்ததன்   பின்னை 
- இந்திரசித்து அவனை
வென்று கட்டிவைத்த பின்பு;   இனம்  தழும்பு தாளினும் உள
தோளினும் உள
- இந்திரனுடைய   கால்களிலும் தோள்களிலும்
இன்னும் தழும்புகள் உள்ளன. 
 

இந்திரனுடன்      போரிட்டு   வென்றமையால் 'இந்திரசித்து'
எனப் பெயர் கொண்டான் இராவணன் மகனான மேகநாதன். இரு
கோள்களையும் சிறை வைத்த இராவணன் மகன் என்பதால் "சிறை