பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 321

என்னும் அனையவன் திறம்-  இராவணன்   என்ற   பெயர்
உடைய  அவனது திறத்தை; யானறி அளவெலாம் அறைவென்
- யான் அறிந்திருக்கும் அளவுக்கு எல்லாம் எடுத்துக் கூறுவேன்;
நான்முகன் தகைமகன்   சிறுவற்குத்   தனையன்-   பிரம
தேவனது   தகுதிமிக்க   மகனான   புலத்தியனுக்கு   மகனான
விச்சிரவசுவின்   மகனாகும்;   தவத்தால் - இராவணன் செய்த
தவத்தினாலே;   முனைவர்  கோன்   வரம்  -    அந்தணர்
தலைவனான பிரமன்   தந்தவரம்;  முக்கணான் வரத் தொடும்
உயர்ந்தான்
- மூன்று   கண்களை உடைய சிவபெருமான் தந்த
வரம் இவைகளால் உயர்ந்தவனானான்.
 

பிரமனுக்கு   மகன்   புலத்தியன்; அவன் மகன் விச்சிரவசு;
அவன் மகன் இராவணன்.  முனைவர்   கோன்  -   அந்தணர்
தலைவன்   (நான்முகன்) பிரமன் தந்தவரம் முக்கோடி வாழ்நாள்.
முக்கணான்   தந்த   வரம்   "யாராலும்   வெலப்படாய் எனக்
கொடுத்தவாள்" (சந்திரகாசம்) 
 

(52)
 

6568.

'எள் இல் ஐம் பெரும் பூதமும் யாவையும் உடைய
புள்ளிமான் உரி ஆடையன் உமையொடும்

பொருந்தும்

வெள்ளி அம் பெருங் கிரியினை வேரொடும் வாங்கி, 
அள்ளி விண் தொட எடுத்தனன், உலகு எலாம் 

அனுங்க.

 

எள்இல் ஐம்பெரும் பூதமும் - எவரும் சிறிதென இகழாத
மண்,  நீர், கால், தீ என்ற ஐந்து பெரிய பூதங்களும்; யாவையும்
உடைய   
- இவற்றின் வேறுபாட்டால் உண்டான பிற எல்லாப்
பொருள்களையும் உடையவனாகிய; புள்ளிமான் உரி ஆடையன்
- புள்ளிகளை   உடைய   புலியின்    தோலை     ஆடையாக
அணிந்துள்ள   சிவபிரான்;    உமையொடும்   பொருந்தும் -
உமாதேவியுடன்   தங்கியிருக்கும்;   வெள்ளி   அம்  பெருங்
கிரியினை 
-    வெள்ளியங்கிரியாகிய   பெரிய   மலையினை;
வேரொடும் வாங்கி   அள்ளி - வேரோடு பேர்த்து அள்ளி;
உலகெலாம் அனுங்க
-  எல்லா   உலகங்களும் வருந்தும்படி;
விண் தொட எடுத்தனன்
- விண்ணைத் தொடும்படி எடுத்தவன்.
 

எள்ளில் - இகழ்தல் இல்லாத (சிறிதென்று எவரும் இகழ்ந்து
கூறமுடியாத என்பது பொருள்). புள்ளி மான் இங்கே வேங்கைப்