மகுடங்களோடு, தலை குறையும்படி; அலங்கல் வாள் கொடு - வெற்றிமாலை சூட்டியவாளைக் கொண்டு; கொன்ற அதன் பின் - கொன்ற அதற்குப் பிறகும்; இலங்கை வேந்தன்- இலங்காதிபன்; என்று உரைத்தலும் - என்று கூறக் கேட்ட அளவிலே; தானவர் தேவியர் கருப்பம் - தானவர்களது மனைவி மார்களின் கருப்பம்; இடியுண்ட அரவின்- இடியோசை கேட்டு அஞ்சும் பரம்பைப் போல; இனம் கலங்குமால் - இன்னும் கலங்கும். |
இராவணன் கால கேயரை வென்ற செய்தி கூறப்படுகிறது. குல மணி முடி - நல்ல சாதி மணிகளால் அலங்கரிக்கப்பட்ட மகுடம். குறைய - அழிய. 'கொன்ற அதன் பின்' என்பதற்கு கொன்று பல நாட்களாகிய அதன் பின் என்பது பொருள். கால கேயர் தானவர் ஆதலின் தானவர் தேவியர் இடி யோசை கேட்ட நாகம் போல அஞ்சி நடுங்க அந்த அச்சத்தால் அவர்கள் கருப்பம் கலங்கியது இனம் - இன்னும். |
(55) |
6571. | 'குரண்டம் ஆடு நீர் அளகையின் ஒளித்து உறை |
| குபேரன், |
| திரண்ட மாடும், தன் திருவொடு நிதியமும், |
| இழந்து,- |
| புரண்டு, மான் திரள் புலி கண்டது ஆம் என, |
| போனான்- |
| இரண்டு மானமும், இலங்கை மா நகரமும் இழந்து. |
| |
குரண்டம் ஆடு நீர் அளகையின்- கொக்குகள் விளையாடித் திரியும் நீர் நிலைகளை உடைய அளகாபுரியில்; ஒளித்து உறை குபேரன்- இராவணனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த குபேரன்; திரண்டமாடும் தன் திருவொடு நிதியமும் இழந்து- தனக்குரிய திரண்ட செல்வத்தையும் வெற்றித் திருமகளையும், சங்க நிதி, பதுமநிதி என்பவைகளையும் இராவணனிடம் இழந்து போய்; இரண்டு மானமும் இலங்கை மாநகரமும் இழந்து - தன் மானம், விமானம் என்று இரண்டு மானமும், இலங்கை மாநகரத்தையும் இழந்து; மான்திரள் புலிகண்டதாம் என - புலியைக் கண்ட மான் கூட்டம் அஞ்சி ஓடுவது போல; புரண்டு போனான்- இராவணனிடம் தோற்று புரண்டு ஓடிப் போயினான். |
குரண்டம் - கொக்கு. அளகாபுரி குபேரனுடைய நகரம் நீர்நிலைகளில் கொக்குகள் விளையாடி மகிழும் என்பதை 'குரண்டம் |