பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 325

பருணன்தன் பெரும் பாசமும் பறிப்புண்டு, பயத்தால்
வருணன் உய்ந்தனன், மகர நீர் வெள்ளத்து 

மறைந்து.

 

இருள் நன்கு ஆசற- இருள் நன்றாக   விலகும்படி;   எழு
கதிரவன்  நிற்க
- கீழ்த்திசையில் எழும் சூரியன் இருக்கட்டும்;
என்றும்   அருணன்   கண்களும் -   சூரியனுடைய  தேரில்
சாரதியாக   முன்னால்   அமர்ந்திருக்கும் அருணனது கண்களும்
கூட; கண்டிலா இலங்கை- பார்த்திராதது இலங்கை நகர்; பண்டு
அமரில்
-   முன்பு   இராவணனுடன்      செய்த   போரிலே;
பருணன்தன் பெரும்   பாசமும்   பறிப்புண்டு  
-  திறமை
உடையவன் என்றாலும் தனது  படையாகிய   பாசம் பறிக்கப்பட;
பயத்தால்
-  இராவணனைப்பற்றிய   அச்சத்தினாலே; மகர நீர்
வெள்ளத்து
-  மகாமீன்களை  உடைய கடல் நீரிலே; மறைந்து
வருணன் உய்ந்தனன்
- மறைந்து வருணன் தப்பிப் பிழைத்தான்.
 

இராவணன்   வருணனை     வென்றது    கூறப்பட்டுள்ளது.
இராவணனுடன்   நிகழ்ந்த  போரில்  தோற்றுத் தனது படையான
பாசத்தைப் பறி  கொடுத்து விட்டுக்  கடலில் சென்று மறைந்தான்.
வருணன்  என்பது கருத்து.  பருணன் - திறமுள்ளவன்.  ஆசற -
சிறிதும் இல்லாதபடி. 
 

(58)
 

6574.

'என்று உலப்புறச் சொல்லுகேன், இராவணன் 

என்னும்

குன்று உலப்பினும் உலப்பு இலாத் தோளினான் 

கொற்றம்?

இன்று உலப்பினும், நாளையே உலப்பினும், சில நாள்
சென்று உலப்பினும் நினக்கு அன்றி, பிறர்க்கு 

என்றும் தீரான்.

 

இராவணன்  என்னும் - இராவணன் என்ற பெயரை உடைய;
குன்று   உலப்பினும்
- மலை     அழிந்தாலும்;   உலப்பிலாத்
தோளினான்  கொற்றம்
- அதனுடன் மாறு கொண்டும் அழியாது
தோள்களை   உடையவனது   வெற்றியை;   என்று   உலப்புறச்
சொல்லுகேன்
- என்று   நான்முடிவாகச்   சொல்லுவேன்; இன்று
உலப்பினும் நாளையே   உலப்பினும் 
-   இராவணன் இன்று
இறப்பான் ஆயினும்,  நாளையே    இறப்பானாயினும்;   சிலநாள்
சென்று உலப்பினும்
  - அல்லது  இன்னும் சில நாட்கள் கழிந்த
பின் இறந்தானாயினும்; நினக்கு