பக்கம் எண் :

326யுத்த காண்டம் 

அன்றிப்  பிறர்க்கு என்னும்  தீரான்-  உனக்கு  அல்லாமல்
வேறு எவருக்கும் அழிந்து தீரான்.
  

இராவணன் மலையுடன் மோதியதால் மலை அழிந்ததேயன்றித்
தோள்கள் அழியவில்லை  என்பான்   'உலப்பிலாத்  தோளினான்'
என்றான்.  பிறர்  எவராலும் அழிவில்லாத இராவணன்  உன்னால்
மட்டுமே கொல்லப்படுபவனாவான்  என்பதை   'நினக்கு அன்றிப்
பிறர்க்கு என்றும் தீரான்'  என்றான். தீரான் - அழியான்.
    

(59)
 

இலங்கையில் அனுமன் புரிந்த வீரச்செயல்கள்
 

கலித்துறை (வேறுவகை)
  

6575.

'ஈடு பட்டவர் எண்ணிலர் தோரணத்து, எழுவால்;
பாடு பட்டவர் படு கடல் மணலினும் பலரால்;
சூடு பட்டது, தொல் நகர்; அடு புலி துரந்த
ஆடு பட்டது பட்டனர்; அனுமனால் அரக்கர்.
 

தோரணத்து -  அசோக வனத்தின்  வெளியே  அமைந்த
கட்டுவாயிலில்;   எழுவால்    ஈடுபட்டவர்   எண்ணிலர்-
அனுமானது  இரும்புத் தடியால்  வலிமை இழந்தவர் பல பேர்;
பாடுபட்டவர் -  அடிபட்டு  அழிந்து    போன அரக்கர்கள்;
படுகடல்  மணலினும்  பலரால்-  கடற்கரை   மணலைவிட
எண்ணற்றவராவார்; தொல்நகர்  சூடுபட்டது -  பழமையான
இலங்கை மாநகரம்  அனுமன் வைத்த  தீயால் சூடுபட்டழிந்தது;
அனுமனால் அரக்கர் - அனுமனுடைய வலிமையால் இலங்கை
அரக்கர்கள்;   அடுபுலிதுரந்த   ஆடுபட்டது    பட்டனர்-
கொல்லவல்ல புலி துரத்த ஆட்டுக் கூட்டம் என்ன பாடுபடுமோ
அந்தப் பாடுபட்டனர்.
  

தோரண  கம்பத்திலே  ஈடுபட்டவர்  வலிமை இழந்தவர்.
பாடுபட்டவர்  -  துன்புற்றவர்கள். அனுமனால் விரட்டப்பட்ட
அரக்கர்களுக்கு,   புலியால்     விரட்டப்பட்ட    ஆடுகள்
உவமையாகும். 
 

(60)
 

6576.

எம் குலத்தவர், எண்பதினாயிரர், இறைவர்,
கிங்கரப் பெயர் கிரி அன்ன தோற்றத்தர், கிளர்ந்தார்;
வெங் கரத்தினும் காலினும் வாலினும் வீக்கி.
சங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார்.
 

எம்  குலத்தவர்   எண்  பதினாயிரர்- எமது அரக்கர்
குலத்தில் பிறந்தவர்கள் எண்பதினாயிரம் பேர்களும்; இறைவர் -