பக்கம் எண் :

 இலங்கை கேள்விப் படலம் 327

அவர்களுக்குத்தலைவர்களான; கிங்கரப்  பெயர்  கிரியன்ன
தோற்றத்தர்
- கிங்கார்  என்னும் பெயருடைய மலை போன்ற
தோற்றத்தவரும் ஆகி; கிளர்ந்தார்- அனுமனுடன்  போரிடப்
பொங்கி எழுந்தவர்களை; வெங்கரத்தினும்- அனுமான் தனது
வலிய கைகளினாலும்; காலினும்,  வாலினும்  - கால்களாலும்
வாலினாலும்; வீக்கி  - இறுகப்  பிணித்தமையால்;  சங்கரற்கு
அழி
- சிவ  பெருமானாலே  அழிந்துபோன;   முப்புரத்தவர்
எனச் சமைந்தார் 
-   திரிபுரத்து   அரக்கர்களைப்  போல
முடிந்தனர்.
  

கிங்கார்களை அனுமன் கைகளாலும் கால்களாலும் வாலாலும்
பிணித்து அழித்தான் என்க. சிவபிரானால் அழிந்த திரிபுரத்தவர்
அனுமனால்  அழிந்த  கிங்கரருக்கு  உவமையாம்.  சமைதல் -
அழிதல். 
  

(61)
 

6577.

'வெம்பு மாக் கடற் சேனை கொண்டு எதிர் பொர

வெகுண்டான்,

அம்பும் ஆயிரத்து ஆயிரம் இவன் புயத்து அழுத்தி.
உம்பர் வானகத்து ஒரு தனி நமனைச் சென்று 

உற்றான்.

 

சம்புமாலியும், வில்லினால் சுருக்குண்டு-தலைவ!
 

தலைவ- தலைவனே!; சம்பு  மாலியும்- சம்புமாலி என்ற
அரக்கர் தலைவனும்; வெம்பும்  மாக்கடல் சேனைகொண்டு
- சினம் மிக்க பெரியகடல் போன்ற படையைக் கொண்டு; எதிர்
பொர வெகுண்டான்
- அவனை  எதிர்த்துப்  போர் செய்யச்
சினம்  கொண்டு  வந்தான்; அம்பும் ஆயிரத்து  ஆயிரம் -
ஆயிரம் ஆயிரம் அம்புகளை விட்டு; இவன் புயத்து அழுத்தி
- இந்த அனுமன் புயத்திலே  அழுந்தச்  செய்து; வில்லினால்
சுருக்குண்டு
-  அவன்  கை   வில்லினாலேயே அனுமனால்
சுருக்கிடப்பட்டு; உம்பர்  வானத்து-  தேவர்கள்   வாழும்
விண்ணுலகுக்கு; ஒருதனி நமனைச் சென்று உற்றான்- தனி
ஒருவனாக எமனைச் சென்று அடைந்தான்.
 

வெம்பு - வெகுளும். 
  

(62)
 

6578.

'சேனைக் காவலர் ஓர் ஐவர் உளர், பண்டு தேவர்
வானைக் காவலும் மானமும் மாற்றிய மறவர்.