பக்கம் எண் :

328யுத்த காண்டம் 

தானைக் கார்க் கருங் கடலொடும், தமரொடும்,

தாமும்,

யானைக் கால் பட்ட செல் என, ஒல்லையின்

அவிந்தார்.

 

சேனைக்காவலர்  ஓர்   ஐவர்  உளர்  - இராவணனது
சேனையின் காவலர் ஐந்து பேர் உள்ளனர் (பஞ்சசேனாதிபதிகள்);
பண்டு  தேவர் வானை - முன்பு  தேவர்களின் வானுலகத்தை;
காவலும்  மானமும் மாற்றிய  மறவர்  -   பாதுகாப்பையும்,
மானத்தையும்  மாற்றியவீரர்கள்;  தானைக்   கார்க்   கரும்
கடலொடும் 
  -   படையாகிய   கரிய   பெரிய  கடலுடனே;
தமரொடும்  தாமும் -  தமது   உறவினருடனே  தாங்களும்
(அனுமனுடன்  போரிட  வந்தவர்கள்);  யானைக்  கால்பட்ட
செல்என
- யானையினது  கால்களில் மிதிபட்ட கறையானைப்
போல; ஒல்லையின்  அவிந்தார்  -  விரைந்து   அழிந்து
போயினர்.
 
 

(63)
 

6579.

'காய்த்த அக் கணத்து, அரக்கர்தம் உடல் உகு 

கறைத் தோல்,

நீத்த எக்கரின், நிறைந்துள கருங் கடல்; நெருப்பின் 
வாய்த்த அக்கனை, வரி சிலை மலையொடும் 

வாங்கி,

தேய்த்த அக் குழம்பு உலர்ந்தில, இலங்கையின் 

தெருவில்.

 

காய்த்த அக்கணத்து-  (அனுமனை) சினமடையச்  செய்த
அந்தக்  கணத்திலே; அரக்கர்தம் உடல் உகு- அந்த அரக்க
வீரர்களின்   உடலில்   இருந்து   சிந்தும்;   கறைத்தோல் -
இரத்தமும் அவர்களின்  உடல் தோல்களும்; நீத்த  எக்கரின்
- கடற்கரையிலுள்ள மணல் திட்டுக்களைப் போல; நிறைந்துள
கருங்கடல்
- எங்கும்   கரிய  கடலாக நிறைந்துள்ளனவாயின்;
நெருப்பின்  வாய்த்த  அக்கனை - நெருப்பென வெகுண்டு
வந்த  இராவணன் மகனான  அட்சய  குமாரனை; வரி சிலை
மலையொடும் வாங்கி
- கட்டமைந்த வில்லாகிய மலையோடு
இழுத்து  வாங்கி; தேய்த்த  அக்குழம்பு - காலால் தேய்த்த
அக்குழம்பு;   இலங்கையின்   தெருவில்   உலர்ந்தில  -
இலங்கை வீதியிலே இன்னும் உலரவில்லை.