பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 345

பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர்கொண்டு

பொரும,

பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர்.
 

ஏதம் அஞ்சி நான் இரந்ததே- தீமைக்குப் பயந்து  நான்
வருணனை  இரந்து  வேண்டியதனையே  கொண்டு;  எளிதென
இகழ்ந்த
  -  எளியவன்   என்று   இகழ்ந்து   வராத;  ஓதம்
அஞ்சினோடு  இரண்டும் 
-   ஐந்துடன்  இரண்டாகிய ஏழு
கடல்களும்; வெந்து ஒரு பொடியாக- எனது அம்பால் வெந்து
தூள்தூளாகவும்; பூதம்  அஞ்சும்   வந்து   அஞ்சலித்து -
ஐம்பெரும்   பூதங்களும்  வந்து   என்னை  வணங்கி;   உயிர்
கொண்டு  பொரும
- உயிர்  கொண்டு  வாழ  வேண்டி அழுது
தேம்பவும்; பாதம் அஞ்சலர்- நடந்து செல்ல அஞ்சாதவர்களாய்;
என் படைஞர் செஞ்செவே படர்வர்- எனது  வானரப் படை
வீரர்கள் செம்மையாகக் கடலிடையிலே செல்வார்கள்.
 

அம்பெய்து கடலை வற்றச் செய்தால்  கடலில் வாழும் மீன்
முதலியவை அழிய நேரிடும் என்ற தீமைக்குப் பயந்து, என்பதை
'ஏதம் அஞ்சி'  என்றான்.  ஏதம் - தீமை.  ஏழு  கடலும்  என்
அம்பால்  தூளாக,  ஐம்பெரும்  பூதங்களும்   அஞ்சி   உயிர்
பிழைத்துவாழ என்னை  வணங்கி அழுது  தேம்ப - கடல்  நீர்
சுண்டித் தரை வெளிப்பட்டால் என் படைவீரர்கள் செம்மையாக
நடந்து செல்வர் என்பது பொருள். செஞ்செவே - செம்மையாக.
 

(13)
 

6602.

'மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் ஞாலத்து வரினும்,

வெறுமை கண்ட பின், யாவரும் யார் என விரும்பார்;

குறுமை கண்டவர் கொழுங் கனல் என்னினும்

கூசார்;

சிறுமை கண்டவர் பெருமை கண்டு அல்லது தேறார்.'
 

மறுமை  கண்ட மெய்ஞ்  ஞானியர்- மறுமை இன்பமான
முத்தி    இன்பத்தை   அனுபவித்த   உண்மையான  ஞானிகள்;
ஞாலத்து  வரினும் - இந்த   உலகத்துக்கு  வந்தார்களாயினும்
அவரிடம்;    வெறுமை    கண்டபின்  -   தாம்   விரும்பும்
சிறப்பியல்பின்மை கண்டால்; யாவரும்  யார் என விரும்பார்-
எவரும்    அந்த   ஞானிகளை  யார்    என்று   கேட்டறிந்து
போற்றவிரும்பமாட்டார்; குறுமை கண்டவர் - ஒருவாறு உருவம்
சிறிதாயிருப்பதைப்  பார்த்தவர்கள்; கொழுங்கனல்  என்னினும்
கூசார்
- அச்சிறிய