கூடும் வெம்பொறிக் கொழுங்கனல்- வெப்பமான தீப்பொறிகளோடு கூடிய கொழுந்துவிட்டெரியும் நெருப்பு; தொடர்ந்தெனக் கொளுந்த - தொடர்ந்து பற்றிக் கொளுத்துவதாலே; ஓடும் மேகங்கள் பொரிந்து இடை உதிர்ந்தன - வானத்திலே ஓடுகின்ற மேகங்கள் பொரிந்து போய் இடையே உதிர்ந்தன; அளக்கர்கோடு தீந்து எழ - கடல் நீர் கொதித்து கடலெல்லையைக் கடந்து மேலே பரந்து செல்ல; கொழும்புகைப் பிழம்பு மீக்கொள- அதனாலே கொழுவிய புகைத் தொகுதி மேல் சென்று சூழ; உம்பர் ஆடும் மங்கையர்- விண்ணுலகத்திலே நாட்டியமாடும் நடன மங்கையரின்; கருங்குழல் விளர்த்தன- கரிய கூந்தலும் வெளிறிப் போயின. |
வெம்பொறிகூடும் என இயைக்க. |
(22) |
6611. | நிமிர்ந்த செஞ் சரம் நிறம்தொறும் படுதலும், |
| நெய்த்தோர் |
| உமிழ்ந்து உலந்தன மகரங்கள் உலப்பு இல; உருவத் |
| துமிந்த துண்டமும் பல படத் துரந்தன, தொடர்ந்து |
| திமிங்கிலங்களும் திமிங்கிலகிலங்களும் சிதறி. |
| |
நிமிர்ந்த செஞ்சரம்- வளைதலில்லாது நிமிர்ந்துள்ள செம்மையான அம்புகள்; நிறந்தொறும் படுதலும்- மார்புகள் தோறும் சென்று படுதலால்; நெய்த்தோர் உமிழ்ந்து உலந்தன - இரத்தம் சிந்தி இறந்தனவான; மகரங்கள் உலப்பில- சுறாமீன்கள் அளவில்லாதனவாம்; உருவத் துமிந்த துண்டமும்- இராமபாணம் ஊடுருவித்துண்டித்த துண்டங்களும்; பலபடத்துரந்தன - பலவாக எங்கும் சிதறலாயின; தொடர்ந்து திமிங்கிலங்களும் திமிங்கில கிலங்களும் சிதறி- தொடர்ந்து அம்புகள் பாய்வதால் திமிங்கிலங்களும், திமிங்கிலகிலங்களும் சிதறி (எங்கும் துண்டுகள் பரந்தன). |
செஞ்சரம் - செம்மையான அம்புகள்; தீயை உமிழ்தலால் சிவந்த அம்பு எனினும் அமையும். நெய்த்தோர் - இரத்தம். உலத்தல் - வற்றுதலுமாம். உலப்பில - அளவற்றன. சிதறித் துரந்தன என இயைந்து பொருள் படும். திமிங்கிலம் - மீன்களை விழுங்கும். ஒருவகைப் பெரியமீன். அதையும் தின்னவல்ல மிகப் பெரியமீன் திமிங்கில கிலம் ஓசனை உலப்பிலாத உடம்பு அமைந்து உடைய என்னத் தேசமும் நூலும் சொல்லும் திமிங்கிலகிலங்கள்' என்று (4777) முன்பும் திமிங்கிலகிலம் |