பக்கம் எண் :

352யுத்த காண்டம் 

குறிக்கப்பட்டது.   மிகப்   பெரிய    பேச்சிலும்   நூல்களிலும்
பதிவாகியுள்ளன  என்பது  அந்தப் பாடலின்  செய்தி;  நேரிலே
கண்டவரில்லை என்பது குறிப்புப் போலும்.
 

(23)
 

6612.

நீறு மீச்செல, நெருப்பு எழ, பொருப்பு எலாம் எரிய,

நூறும் ஆயிர கோடியும் கடுங் கணை நுழைய,

ஆறு கீழ்ப் பட, அளறு பட்டு அழுந்திய அளக்கர்

 

சேறு தீய்ந்து எழ, காந்தின சேடன்தன் சிரங்கள்.
 

நூறும் ஆயிர கோடியும் கடுங்கணை  நுழைய - நூறும்,
ஆயிரமும் கோடியுமாக  விரைந்து  பாயும்  அம்புகள்  கடலில்
நுழைவதால்; நீறு  மீச்செல  நெருப்பெழ-  சாம்பல் மேலே
செல்லும்படி நெருப்பு மேலோங்கி எழுதலால்; பொருப் பெலாம்
எரிய
- மலைகளெல்லாம் தீப்பற்றி  எரிந்தன; ஆறு கீழ்ப்பட-
அம்புகள்  கீழேயும் நுழைவதால்  பாதாளத்துக்கு வழி உண்டாக;
அளறுபட்டு   அழுந்திய   அளக்கர் -  கீழே   சேறுபட்டு
அழுந்தியிருந்த   கடல்; சேறு  தீய்ந்து  எழ- சேறும் தீய்ந்து
கருகி மேலே  எழுதலால்; காந்தின  சேடன்தன்  சிரங்கள்-
பூமியைச்  சுமக்கும்   ஆதிசேடனுடைய  ஆயிரம்  தலைகளும்
வெதும்பின.
 

கருங்கணை - விரைந்து   செல்லும்   அம்புகள்  ஆயிரம்
தலைகளும்  வெதும்பின.  மீச்செய - மேலே செல்ல. அளறு -
சேறு. சேடன் - ஆதிசேடன்.
 

(24)
 

6613.

மொய்த்த மீன் குலம் முதல் அற முருங்கின,

மொழியின்

பொய்த்த சான்றவன் குலம் என, பொரு கணை

எரிய;

உய்த்த கூம்புடை நெடுங் கலம் ஓடுவ கடுப்ப,

தைத்த அம்பொடும் திரிந்தன, தாலமீன் சாலம்.
 

பொருகணை  எரிய-  இராமபிரானுடைய போர்த் தொழில்
வல்ல  அம்புகள்  கொழுந்து  விட்டு  எரிவதால்; மொழியின்
பொய்த்த சான்றவன் குலம் என
- வழக்கில்  பொய்ச் சாட்சி
கூறியவன் குலத்தோடு அழிந்து படுவது போல; மொய்த்த மீன்
குலம் முதல் அற முருங்கின
- நெருங்கிய மீன் கூட்டமெல்லாம்
அடியோடு  அழியலாயின; தாலமீன்  சாலம்-  பனைமீன்களின்
வரிசையானது; தைத்த  அம்பொடு திரிந்தன- உடலில் தைத்த
அம்போடு திரிவன;