பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 353

உய்த்த  கூம்புடை  நெடுங்கலம்-  கடலில்  செலுத்தப்பட்ட
கூம்புகளை   உடைய  நெடிய  மரக்கலங்கள்; ஓடுவ  கடுப்ப-
ஓடுவதை ஒத்திருந்தன.
 

மொய்த்த - நெருங்கித்  திரண்ட;  இராமபிரானது  அம்புகள்
பட்டு எரிவதால் மீன்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக அடியோடு
இறந்து அழிந்தன என்பதற்கு வழக்கில் பொய்ச் சாட்சி கூறியவன்
குலத்தோடு அழிவதைக் கூறினார். பொய்க்கரி கூறுவதன் தீமையை
இங்கு எடுத்தியம்புவது நினைவு கூர்தற்குரியது. சாலம் - வரிசை.
 

(25)
 

6614.

சிந்தி ஓடிய குருதி வெங் கனலொடு செறிய,

 

அந்தி வானகம் கடுத்தது, அவ் அளப்ப அரும்

அளக்கர்;

பந்தி பந்திகளாய் நெடுங் கணை படர,

வெந்து தீந்தன, கரிந்தன, பொரிந்தன, சில மீன்.
 

சிந்தி ஓடிய  குருதி  வெங்கனலொடு  செறிய-  அம்பு
தைத்தலால் மீன்  முதலியவற்றினிடமிருந்து சிந்தி ஓடிய இரத்தம்
வெவ்விய நெருப்புடன் செறிவதால்; அந்தி வானகம் கடுத்தது-
அந்தி   வானத்தை  ஒத்திருந்தது; அவ்வளப்படும் அளக்கர்-
அந்த  அளவிடமுடியாத  கடல்; பந்தி  பந்திகளாய்-  வரிசை
வரிசையாக;  நெடுங்கணை   படர -  நீண்ட அம்புகள் பரந்து
படர்ந்தமையால்;    சிலமீன்   வெந்து   தீந்தன  கரிந்தன
பொரிந்தன
- மீனினமெல்லாம் வெந்து, தீய்ந்து, கரிந்து பொரிந்து
போயின.
 

கடுத்தது - ஒத்திருந்தது. பந்தி - வரிசை அளக்கர் - கடல்.
கடல்மீது சிந்தி  ஓடிய  இரத்தத்தோடு, வெப்பமான  நெருப்பும்
செறிந்திருப்பதால்    அந்தப்    பெரிய   கடல்    முழுவதும்
அந்திவானைப்  போலக்   காணப்பட்டது.  பந்தி  பந்தியாய் -
அடுக்குத் தொடர்.
 

(26)
 

6615.

வைய நாயகன் வடிக் கணை குடித்திட, வற்றி,

ஐய நீர் உடைத்தாய், மருங்கு அருங் கனல் மண்ட,

கை கலந்து எரி கருங் கடல் கார் அகல் கடுப்ப,

 

வெய்ய நெய்யிடை வேவன ஒத்தன, சில மீன்.
 

வையநாயகன்   வடிக்கணை   குடித்திட  -   உலகின்
நாயகனாகிய   ராமபிரான் எய்த  கூர்மையான  அம்புகள் கடல்
நீரைக்  குடித்து  விடுவதால்; வற்றி,  ஐயநீர்  உடைத்தாய்-
கடல் தண்ணீர் வற்றிப் போக சிறிதளவு  நீரே கடலில் இருக்க;
மருங்கு அருங்கனல் மண்ட-