| மண்ணில் வேர் உறப் பற்றிய நெடு மரம், மற்றும், |
| எண்ணெய் தோய்ந்தென எரிந்தன, கிரிக் குலம் |
| எல்லாம். |
| |
அண்ணல் வெங்கணை அறுத்திட- இராமபிரான் எய்த கொடிய அம்புகள் அறுப்பதாலே; தெறித்து எழுந்து அளக்கர்ப் பண்ணைவெம்புனல்- மேலே தெறித்து எழுந்த கடலாகிய நீர் நிலையின் கொதிக்கும் நீர்; மண்ணின் வேர் உறப் பற்றிய நெடுமரம்- மண்ணிலே வேரூன்றி வளர்ந்த நீண்ட மரங்களும்; மற்றும் கிரிக்குலம் எல்லாம்- மற்றும் மலைக் கூட்டங்கள் எல்லாமும்; எண்ணெய் தோய்ந்தென எரிந்தன- எண்ணெயில் தோய்ந்தன போல எரியலாயின. |
அளக்கர்ப்பண்ணை - கடலாகிய நீர் நிலை. நெருப்பை அணைப்பது நீர் அந்த நீரும் இராமன் அம்புகளால் கொதித்து, அந்த நெருப்புக்கு எண்ணெய் போல எரிவதற்கு உதவியது என்பது கருத்து. வெம்புனல் பட, நெருப்பொடு பற்றி நெடுமரம், கிரிக்குலம் எரிந்தன என இயையும். |
(31) |
6620. | தெய்வ நாயகன் தெரி கணை, 'திசை முகத்து |
| ஒருவன் |
| வைவு இது ஆம்' என, பிழைப்பு இல மனத்தினும் |
| கடுக, |
| வெய்ய அந் நெருப்பு இடை இடை பொறித்து எழ, |
| வெறி நீர்ப் |
| பொய்கை தாமரை பூத்தெனப் பொலிந்தது, புணரி. |
| |
தெய்வ நாயகன் தெரிகணை- தெய்வங்களுக் கெல்லாம் தலைவனான இராமபிரான் தெரிந்தெடுத்து எய்த அம்புகள்; திசை முகத்து ஒருவன் வைவு இதாமென- பிரமதேவன் கொடுத்த சாபம் இது என்று கூறும்படி; பிழைப்பில மனத்தினும் கடுக- தவறுதலின்றி மனத்தைவிட வேகமாகச் செல்ல; வெய்ய அந்நெருப்பு இடையிடை பொறித்து எழ- அதனால் வெம்மை நிறைந்த நெருப்பு இடையிடையே தீப்பொறிகளுடன் மேலே எழ; புணரி- அக்கடல்; வெறி நீர்ப் பொய்கை- மணம் மிக்க நீரையுடைய பொய்கை; தாமரை பூத்தெனப் பொலிந்தது- தாமரை மலர்களைப் பூத்தது போலப் பொலிந்தது. |