பக்கம் எண் :

 வருணனை வழி வேண்டு படலம் 357

தெரிகணை  -  தெரிந்தெடுத்து    எய்த  அம்புகள்.  திசை
முகத்தொருவன் -  பிரமன்.  வைவு  -  சாபம். பிரமனின்  சாபம்
தவறாது சென்று சபிக்கப்பட்டவர்களை, அதன் பயனைத் துய்க்கச்
செய்யுமாதலின் -  இலக்கை   நோக்கித் தவறாது சென்று பாயும்
அம்புகளை  'வைவு  இதாம்  என'  என்றார்.  தாமரை  மலர்ந்த
பொய்கை  உவமானம் நெருப்புப் பற்றி எரியும் கடல் உவமேயம்.
கடுக - விரைந்து செல்ல.
 

(32)
 

6621.

செப்பின், மேலவர் சீறினும் அது சிறப்பு ஆதல்

தப்புமே? அது கண்டனம், உவரியில்; 'தணியா

உப்பு வேலை' என்று உலகு உறு பெரும் பழி நீங்கி,

அப்பு வேலையாய் நிறைந்தது; குறைந்ததோ,

அளக்கர்?

 

செப்பின்-  சொல்லுவோமானால்;   மேலவர்   சீறினும்-
மேலோர்கள் வெகுண்டாலும்; அது சிறப்பாதல் தப்புமே- அது
நன்மையாவது  தவறுமோ? (தவறாது); அது கண்டனம்- அதனை
இப்போது  நேரிலே  பார்த்தோம்; உவரியில்  தணியா  உப்பு
வேலை என்று
- கடலில்  குறையாத  உப்பு   நிறைந்திருத்தலால்
'உப்புக்கடல்' என்று; உலகு  உறு பெரும்  பழி நீங்கி- உலகம்
இது வரை கூறிய  பெரியபழி  இன்று  நீங்கி; அப்பு வேலையாய்
நிறைந்தது
-  அம்புக்   கடலாக   நிறைந்திருந்தது;   அளக்கர்
குறைந்ததோ
- கடல் குறைவுற்றதோ; (இல்லை)
 

மேலவர் - கல்வி  அறிவு  நிரம்பிய  மேலோர்.  'உவரியில்
அது கண்டனம் என  இயைத்துப் பொருள்  கூறினும் அமையும்.
அப்பு - நீர் அம்பு என்பது வலிந்து அப்பு  என ஆயிற்று. இரு
பொருள் படக் கூறியதோர் நயம். நல்லோர் சினந்தாலும் நன்மை
உண்டு  என்பதைக்  கடலால்  தெரிந்து  கொண்டோம் என்பது
கருத்து.
 

(33)
 

6622.

தாரை உண்ட பேர் அண்டங்கள் அடங்கலும் தானே

வாரி உண்டு அருள் செய்தவற்கு இது ஒரு

வலியோ?-

பாரை உண்பது படர் புனல்; அப் பெரும் பரவை

நீரை உண்பது நெருப்பு எனும் அப் பொருள்

நிறுத்தான்!

 

தாரை  உண்ட  பேரண்டங்கள்  அடங்கலும்- ஒன்றன்
மேல் ஒன்றாக ஒழுங்குபட அமைந்துள்ள பெரிய அண்டங்கள்